எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது நாமக்கல்லிலிருந்து சுமார் 31 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் 500 வருடங்கள் பழமைவாய்ந்தது. இத்திருத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், உற்சவர் சோமாஸ்கந்தர், அம்மன் தாயார் அறம் வளர்த்த நாயகி ஆவார். மேலும் இத்தல பெருமைகள் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். இத்தலத்தில் நெல்லி விருட்சமரமாக உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் லிங்கத்தின் மேல் அம்பு பட்ட தலும்பு ஒன்று இருப்பது சிறம்பம்சமாகும். இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையை தலைநகரமாகக் கொண்டு வல்வில் ஒரி என்னும் மன்னன் இராசிபுரம் பகுதிகளையும் ஆட்சி செய்து கொண்டு வந்தான். வல்வில் ஒரி ஒரு சிவபக்தன். வில்வித்தையிலும் சிறந்த வீரம். இராசிபுரம் பகுதியில் வேட்டைக்கு வந்த மன்னனுக்கு வனத்தில் ஒரு மிருகம் கூட கண்ணுக்கு தென்படவில்லை. அலைந்து சோர்ந்து போன நேரத்தில் ஓரிடத்தில் வென்பன்றி ஒன்றைக் கண்டான். உடனே அப்பன்றியை தூரத்திக் கொண்டு அதன் மீது அம்பை எய்தான். எய்த அம்பு பன்றியின் மேல் தாக்கியும் பன்றி நிற்காமல் ஓடியது. மன்னன் பன்றியை வெகுதூரம் பின் தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடி பன்றி ஓரிடத்தில் ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது. மன்னன் புதரை விலக்கி பார்த்தபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கமாக தோன்றிய ஒரு லிங்கத்தைக் கண்டான். மன்னன் எய்த அம்பு பட்டு லிங்கத்தின் நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். மன்னனுக்கு சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். உடனே மன்னன் சுயம்புலிங்கம் தோன்றிய இடத்திலேயே சிவபெருமானுக்கு கோவில் எழுப்பத் தொடங்கினான். வல்வில் ஒரி மன்னனுக்கு பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தடியில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் மன்னன் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சியளிக்கிறார். ஆடிப் பெருக்கன்று இக்கோவிலைக் கட்டிய வல்வில் ஒரி மன்னனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. பொங்கல், சுண்டல், நைவேத்யம் செய்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இத்தல விநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். கைலாசநாதர் தலத்தின் பிரகார வலத்தை முதலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில்இராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. காசி, இராமேஸ்வரம் தலங்களில் எழுந்தருளும் சிவனை இத்தலத்தில் தரிசிக்கும் விதமாக விஸ்வநாதர் சன்னதி விமானம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமானதாகும்.
மேலும் இத்தலத்தில் அம்பாள் சன்னதி அருகில் முருகன் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் முருகப்பெருமானின் இரண்டு கோலங்களையும் நாம் தரிசிக்கலாம்.
பொதுவாக சிவராத்திரியின் போது சிவனுக்கு இரவில் நான்கு கால பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்கின்றார்கள். அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். நாயகிக்கு முன்புறம் மகாமேரு அமைந்துள்ளது. மேலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர் எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயி லுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கையாக காட்சி தருகிறாள். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சிவதுர்க்கைக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஹோமங்கள் நடக்கின்றன. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை பிரசாதமாக தருகின்றார்கள்.
நாகருக்கு இத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது. நாகதோஷமுள்ளவர்கள், தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது. காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, ஏகாதச ருத்ரபாராயணம் நடைபெறுகின்றது. 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது. மேலும் பஞ்சலிங்கம், கஜலெட்சுமி, சரஸ்வதி, நாயன்மார்கள், நால்வர், ஐயப்பன் மற்றும் சந்தான குறவர்களும் உள்ளனர்.
அறம் வளர்த்த நாயகி சன்னதியில் வளர்பிறை பிரதோஷத்தின் போது உச்சிக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விசேஷ வழிபாடு நடக்கின்றது. அப்போது தேங்காய், பழம், அரிசி மற்றும் உப்பில்லாத சாதம் முதலானவற்றை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த கோவில் பிரகாரத்தில் கங்கை தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி மற்றும் இவருக்கு எதிரே நந்தி அமைந்துள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகட விநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட கல்வியில் சிறப்பிடலாம் என்பது நம்பிக்கை.
கைலாசநாதரிடம் வேண்டிக் கொண்டால் கலைகளில் சிறப்பிடம் பெறலாம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள். சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசியில் விசாகம், தையில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்பொழுது? - தேர்வு வாரியம் அறிவிப்பு
04 May 2024சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024