எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.17 - 7 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையிலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்களையும், அவற்றை மீறினால் நேரும் இழப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லுதல்; சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக காவல்துறையில் தனியே போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் மாநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 206 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும், மக்கள் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொடர்பான காவல் பணிகளை மேலும் செம்மையாக செய்வதற்கு ஏற்ற வகையில் போதிய காவல் நிலையங்ளை முக்கிய நகர் பகுதிகளில் ஏற்படுத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்ண்டியில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், ஆக மொத்தம் 5 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமை காவலர்கள், 15 கிரேடுஐ காவலர்கள், 30 கிரேடுஐஐ காவலர்கள், 5 கிரேடுஐஐ ஒட்டுநர்கள், ஆக மொத்தம் 80 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதி தற்போது விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகள், போன்றவை பெருகி உள்ள காரணத்தால், இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வளசரவாக்கம் பகுதிக்கென தனியே ஒரு போக்குவரத்து காவல் நிலையத்தினை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.
மேலும், பழைய மகாபலிபுரம் சாலையை ஞஙத) ஒட்டியுள்ள செம்மஞ்சேரி பகுதியில், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் போக்குவரத்து பல்கிப் பெருகி உள்ளது. இதனால், போக்குவரத்து காவல் பணிகளை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தால், செவ்வனே செய்ய இயலவில்லை. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செம்மஞ்சேரி பகுதிக்கென ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளார்.
இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக, 2 ஆய்வாளர்கள், 4 சார் ஆய்வாளர்கள். 6 தலைமை காவலர்கள், 6 கிரேடுஐ காவலர்கள், 12 கிரேடுஐஐ காவலர்கள், 2 கிரேடுஐஐ ஒட்டுநர்கள், ஆக மொத்தம் 32 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும், 1 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் தொடரா செலவினமும் கூடுதலாக ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப