எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழத்தில் தற்போது நடைபெற்று வரும் எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு 4 ஆண்டுகள் தொடரும் என சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
திட்டப்பணிகள்:
எடப்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் நேற்று மதியம் நடைபெற்ற அரசு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமை வகித்தார். எம்.பி. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்தவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு ரூ1கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இதையடுத்து. 1306 பயனாளிகளுக்கு ரூ.19.18 கோடியே மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
எடப்பாடி தொகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.20 கோடி மதிப்பிலான திட்டத்தை வழங்கினார்.
நான் அமைச்சராக இருந்த போது வாரம் தோறும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுவந்தேன். தற்போது முதல்வராகிவிட்டதால் 234 தொகுதி மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய திட்டங்களை வகுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் முன்பு போல் எடப்பாடிக்கு வரமுடியவில்லை. இருப்பினும் பலர் சென்னையில் வந்து கோரிக்கை மனு கொடுக்கின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
எப்போதும் சந்திக்கலாம்:
நான் எம்.எல்.ஏ. யாக இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும் எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கின்றேன். என்னை எப்போதும் சந்திக்கலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணிக்கு மேல் நான் பொதுமக்களை சந்திக்கிறேன்.
2011ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தற்போது நங்கவல்லி ஓன்றியத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் அப்பகுதி மக்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேபோல் மேச்சேரி ஒன்றிய மக்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டனர். இந்த இரண்டு ஒன்றிய மக்களுக்கும் ரூ.158 கோடியில் கூட்டு குடிநீர் செயல்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்படும்.
எடப்பாடியில் ரூ.4 கோடியில் மருத்துவமனை, பாலம், கவுண்டப்பட்டி வெள்ளாண்டி வலசு பாலம் திறக்கப்பட்டுள்ளது. சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.1.65 கோடியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி மக்களுக்காக அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டது. 1500 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நங்கவல்லி புதிய பாலிடெக்னிக் அடுத்த ஆண்டு அமைய உள்ளது. எட்டிகுட்டைமேடு அடுத்த ஆண்டு பி.எட் கல்லூரி துவங்கப்பட உள்ளது. இதேபோல் கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கட்சிபள்ளி, பெரியசூரகை, பக்கநாடு ஆகிய ஊர்களில் கால்நடை மருத்துமனை அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகில் திருமண மண்டபம் அமைக்கப்பட்ட உள்ளது கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முருகன் கோவில் கட்டப்பட உள்ளது. சரபங்கா ஆற்று குறுக்கே 6 கோடி செலவில் இரண்டு தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது கிழக்கு கால்வாயில் ஏற்படும் நீர் கசிவால் தண்ணீர் விவசாயத்திற்காக கடைமடை பகுதிக்கு சென்று அடைவதில்லை. தண்ணீர் திறக்கும் போது ஏற்படும் கசிவை அடைக்க கடந்த ஆண்டு அம்மா ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்த ஆண்டு ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்து கிழக்கு கால்வாய் முழவதும் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் எடப்பாடியில் மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.
தூர்வாரும் பணி:
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்க ஆறு ஏரிகளை தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண் படிவுகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ரூ.100 கோடியில் முதல் கட்டமாக 1019 ஏரிகளும் இரண்டாம் கட்டமாக ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டபேரவையில் அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் சுகாதார துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் முதல்வராக வந்தபோது இந்த ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்று சொன்னார்கள். எனது தலைமையிலான் அரசு 4 ஆண்டுகள் தொடரும். அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்னிடம் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை. கல்வி துறையில் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. 140 ஆண்டுகள் இல்லாத அளவில் வறட்சியில் தமிழகம் இருந்த போதும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். இது உங்கள் ஆட்சி மக்களுக்கு தேவையானதை செய்யும் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் எம்.எல்.ஏக்கள் ஜி.வெங்கடாசலம், சக்திவேல், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நன்றி கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.