எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு தடுப்பு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், சுகாதாரம், மகளிர் திட்டம், இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வடபுதுப்பட்டி : வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கணபதி தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மேற்பார்வையிட்டார். சட்ட மையம் சார்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேல்மங்கலம் : மேல்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கோபாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். பெரியகுளம் ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கீழவடகரை : கீழவடகரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 227 பேர் கலந்து கொண்டனர். தீர்மானங்களை செயலர் ஜெயபாண்டி வாசித்தார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் தங்கம் மேற்பார்வையிட்டார்.
குள்ளப்புரம் : குள்ளப்புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் கார்த்திக் மேற்பார்வையிட்டார். தீர்மானங்களை செயலர் ஜெயபாண்டி வாசித்தார். 211 பேர் கலந்து கொண்டனர்.
அழகர்நாயக்கன்பட்டி : கிராமசபை கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையிட்டார். 116 பேர் கலந்து கொண்டனர். செயலர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி ஆய்வு மேற்கொண்டார்.
டி.வாடிப்பட்டி : டி.வாடிப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் பாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். 117 பேர் கலந்து கொண்டனர்.
எண்டப்புளி : எண்டப்புளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சி.பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவராஜா மேற்பார்வையிட்டார். செயலர் முத்துச்செல்வம் தீர்மானங்களை வாசித்தார். ஆரோக்கியமாதா நகர், நேருநகர், புதுப்பட்டி பகுதிகளில் குடிநீர் பைப் அமைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லெட்சுமிபுரம் : லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி மேற்பார்வையிட்டார். கிராம வளர்ச்சி அறிக்கை உள்ளிட்ட தீர்மானங்களை செயலர் லெனின் வாசித்தார். சிறப்பு தீர்மானங்களாக ஊராட்சி கிணற்றிலிருந்து 200 மீட்டருக்குள் ஆழ்துளை குழாய் அமைக்கவோ, கிணறு அமைக்கவோ கூடாது என்றும், வறட்டாறை ஓடையாக மாற்றியது குறித்தும், மீண்டும் வறட்டாறை ஆறாக மாற்றவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து அதற்கான விளக்கத்தை அடுத்து வரும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குன்னூர் ஆற்றுப்பகுதியிலிருந்து லெட்சுமிபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து ஊராட்சிளிலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.