முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர வேட்டை

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் :  காஷ்மீர் மாநிலத்தில் 10 கிராமங்களில் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலையொட்டி அந்த கிராமங்களை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி சோபியான் மாவட்டத்தில் உள்ள டன்கம், வன்கம், சைனாபூரா, மான்ரிபக் உள்பட 10 கிராமங்களை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சோபியான் மாவட்டத்திற்கு வெளியே மேலும் 5 இடங்களில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து