எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தரமணி'யிலும் நிறைய குறைகள் இருக்கின்றன என்று அப்படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராம் தெரிவித்தார்.
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தரமணி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 'தரமணி' வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இச்சந்திப்பில் இயக்குநர் ராம் பேசியதாவது:
2007-ல் இயக்குநராக அறிமுகமானேன். கடந்த 10 ஆண்டுகளில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக, மக்கள் வருகிறார்கள்,
கைதட்டி ரசிக்கிறார்கள், படம் ஓடிவிடும் என்று கேட்பது இதுவே முதல் முறை. எனது முதல் 2 படங்களில் இது நடக்கவில்லை. அப்படி நடக்கவில்லை என்பதால் அடுத்த படங்கள் தாமதமானது.
கடந்த 3 வருடங்கள் 8 மாதங்களாக ஒரு படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது இயக்குநரின் அணி மட்டுமே என நினைக்கிறேன்.
இக்கதையை யோசிக்கும் போது புதுமையாக இருந்தது. இடையே 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'இறைவி' ஆகிய படங்களும் இதே பாணியிலான கதை என்னும் போது, குப்பைத் தொட்டிக்கு 'தரமணி' போகும் சூழல் இருந்தது. இதற்கு இடையே சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.
கதையை யோசித்து முதல் பாதி படப்பிடிப்பு முடியும் வரை வாட்ஸ் ஆப் என்ற ஒன்று கிடையாது. ஆகையால் இரண்டாம் பாதியில் வாட்ஸ் ஆப் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும். இப்படம் வெளியாகும் போது ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற பயமிருந்தது. தயாரிப்பாளர் மிகவும் நம்பினாலும், முந்தைய 2 படங்கள் மூலம் கொஞ்சம் பயமிருந்தது.
'தரமணி' படத்தின் தாமதம் ஏதோ ஒரு வகையில் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு ஜே.எஸ்.கேவுக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும். இப்படத்துக்கு வட்டி எல்லாம் சேர்ந்து ஐந்தரை கோடி வரை ஆனது. யாருமே வாங்க வராத சூழலில், அவரே தனியாக வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
திரையரங்க வசூலை மட்டுமே தற்போது தமிழ் சினிமா நம்பியிருக்கும் சூழலில் ஐந்தரை கோடி படத்தை வெளியிட கடந்த ஓராண்டாக போராடிக் கொண்டிருந்தோம்.'விவேகம்' படத்தோடு 'தரமணி' வெளியீடு என்று ஜே.எஸ்.கே அறிவித்த போது, இது எவ்வளவு விவேகமற்ற செயல் என்று சொன்னேன்.
அப்போது ஆண்ட்ரியா "படம் வெளியானால் போதும், அதுவே நமக்கு பெரிய வெற்றி" என்று சொன்னார்.படத்தின் விளம்பரங்களில் மீம்ஸ் பாணியில் செய்வதற்கு காரணம் என்னவென்றால் என் படத்துக்குள் அது இருந்தது. முக்கியமான காட்சி போய்க் கொண்டிருக்கும் போது, அதை கட் செய்து இடையே 2 வார்த்தைகள் பேசியிருப்பேன்.
அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று முதலில் தெரியவில்லை. ஆகையால்தான் மக்களை படம் எந்த மாதிரி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துவதற்கே விளம்பரங்களை மீம்ஸ் பாணியில் வெளியிட்டோம். ஆனால், எங்களுக்கு விளம்பரங்கள் மக்களிடையே படத்தை பெருவாரியாக கொண்டு போய் சேர்த்தது.
'தரமணி'யிலும் நிறைய குறைகள் இருக்கின்றன. ஒரு பயங்கரமான மாற்று சினிமா எடுத்துவிட்டேன், உலகத்திற்கான ஒரு சினிமா எடுக்க முயற்சித்துள்ளேன் என்று சொல்ல விரும்பவில்லை. இன்னும் இயக்கத்தில் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு காட்சியை நல்லபடியாக எடுத்துவிட்டால், அடுத்த காட்சி எப்படி என்ற குழப்பம் வந்துவிடுகிறது.
ஆண்ட்ரியா முதன் முறையாக இப்படத்தில்தான் நடிகரில்லாமல் நடித்துள்ளார் என நினைக்கிறேன். எப்போதுமே புதுமுக நடிகர்களோடு நடிப்பது என்பது நடிகர்களுக்கு சவாலான விஷயம்.இவ்வாறு இயக்குநர் ராம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.