எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.354 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்; 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9.50 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.34.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைச் சார்ந்த தோழமை துறைகளின் மூலம் பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2015-16ஆம் ஆண்டில் பாரத பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நெல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.355.28 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 93,846 எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு ரூ.354.24 கோடி மதிப்பிலான பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, தொடர்ந்து மீதமுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாவட்டத்தில் உள்ள 51 வருவாய் கிராமங்களுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை குறைந்தபட்சமாக ரூ.5,375 வழங்கவுள்ளதாக பயிர்காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 51 வருவாய் கிராமங்களுக்கும் பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையினை பிற வருவாய் கிராமங்களுக்கு வழங்கியவாறு அதிகபட்சமாக ரூ.17,200 வழங்கிட ஏதுவாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல பயிர்காப்பீடு தொகை நிலுவையிலுள்ள பம்மனேந்தல், அரியமங்களம், பெருநாழி, நீராவி, சக்கரனேந்தல், பட்டனேந்தல், பொதுவக்குடி, பெருங்குளம், கூகுடி ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.306.57 கோடி மதிப்பில் 91 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் என மொத்தம் 53 கண்மாய்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளன. இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5.50 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.30.61 லட்சம் மதிப்பிலான 5 டிராக்டர் இயந்திரங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1800 மதிப்பிலான அரசு மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி தளைகளையும், மீன்வளத்துறையின் சார்பாக மீனவர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 இலட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) பி.ராஜா, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் தாமஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், நபார்டு திட்ட பொது மேலாளர் மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்