எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை திகார் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் டெல்லி திகார் சிறையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கனிமொழிக்கும், ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஹெச்.எல். தத்தூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 நிறுவன அதிகாரிகளையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர். யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் வினோத்கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா ஆகிய 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 2 உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை நீதிபதி தத்தூ வாசித்தார். முன்னதாக, மேற்கண்ட 5 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இரண்டு நீதிமன்றங்களும் இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்ட நிலையில் மேற்கண்ட ஐவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் சி.பி.ஐ. இவர்களை ஜாமீனில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். காரணம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே சாட்சிகளை கலைக்க இனி சந்தர்ப்பமில்லை என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் 5 நிறுவன அதிகாரிகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் முறையாக இவர்களுக்குத்தான் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனால் தங்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னை ஜாமீனில் விடக் கோரி கனிமொழி தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஏற்கனவே 4 முறை நிராகரிக்கப்பட்டு விட்டன. தற்போது அவர் டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கூட எதிர்க்கவில்லை. எனவே கடந்த முறையே அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஒரு பெண் என்பதற்காக ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்த நிலையில்தான் டெல்லி ஐகோர்ட்டில் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரவிருக்கிறது. கனிமொழி மட்டுமின்றி மேலும் நால்வரின் ஜாமீன் மனுக்களும் டிசம்பர் 1 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே கனிமொழிக்காக வாதாடும் சில வழக்கறிஞர்களை மாற்றி விட்டு திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வரும் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரிந்து விடும். அதே வேளையில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு முதல் முதலாக ஜாமீன் கிடைத்திருப்பதால் கனிமொழிக்கு இம்முறை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான். பிறகு அவரது அந்தரங்க உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் கனிமொழி எம்.பி. மற்றும் அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். கடந்த மே மாதத்தில் இருந்து கனிமொழி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 7 மாதங்களாக கனிமொழி திகார் சிறையில் இருந்து வருகிறார். அவரை மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் இதுவரை பலமுறை சந்தித்து ஆறுதல் கூறி விட்டனர். அதே போல கனிமொழியும் தன் தந்தைக்கு தன்னை சந்தித்த போதெல்லாம் ஆறுதல் கூறி தேற்றினார். இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் 1 ம் தேதி அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால், மும்பை திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.