எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : செப்டம்பர் மாதம் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி, திட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம், மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள குருபகவான் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகிறார்கள்.
குருப்பெயர்ச்சி
இவ்வாண்டும் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி காலை 9.25 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி மூலம் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் சிறப்பான பலனை அடைவர். மீதி உள்ள ரிஷபம், கடகம், துலாம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரங்கள் செய்யவேண்டுமென்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதே நேரம், ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருப்பவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் கெடுபலன்கள் ஏற்படாது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
காரணம் இது பொதுப்பலன். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படியே பலன்கள் கிடைக்கும். இருந்தாலும், மக்கள் மத்தியில் குருப்பெயர்ச்சி என்றாலே ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம், குருவித்துறை மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுவது வழக்கம். பரிகார பூஜைகளும், லட்சார்ச்சனைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மேற்கண்ட கோவில்களில் வழக்கம்போல், பூஜைகள் நடைபெறவுள்ளன.
குருவித்துறை கோவில்
குருபகவான் கோவில் அமைந்துள்ள குருவித்துறை மதுரை வைகையாற்றின் கரையோரம் உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு தவக்கோலத்தில் குருபகவான் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று வியாழக்கிழமை பட்டர்கள் ரங்கநாதன், ஷ்ரிதர், சடகோபன், ராஜா ஆகியோர் தலைமையில் லட்சார்ச்சனை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் தேதி காலை 6 மணிமுதல் பரிகார மகாயாகசாலை தொடங்குகிறது. அதைதொடர்ந்து காலை 9.25 மணியளவில் குருபெயர்ச்சி நடைபெற்று திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பரிகார ராசிகள்
குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள் செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில்செயல் அலுவலர் பொறுப்பு சக்கரையம்மாள், தக்கார் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜ், மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
லட்சார்ச்சனை கட்டணம்
ரூ.300 செலுத்துபவர்களுக்கு 2 கிராம் வெள்ளி டாலரும், பிரசாதங்களும் வழங்கப்படும். அதேபோல் ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும். லட்சார்ச்சனை டிக்கெட் வேண்டுவோர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோவிலில் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி குரு தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பாக மகாயாகமும், அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகசங்களும் நடைபெறுகிறது. விசேஷமான இக்கோவிலில் ஸ்தல மூர்த்தியான சனீஸ்வரலிங்கமும், பிரளயநாதர் ராகுவுக்கு அதிபதியாகவும், ஸ்தல நட்சத்திரம் விசாகமும், அது குருவுக்கு உகந்ததுமாக அமையப்பெற்றது சிறப்பம்சமாகும். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மணி, பள்ளி தாளாளர் மருதுபாண்டியன், கோவில் தக்கார் லதா, கணக்கர் பூபதி உள்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.