எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழம்பெரும் பாண்டிய நாட்டின் தலைநகராகிய தமிழ் மதுரை மாநகரின் உள்ளதும் அதனை சூழ்ந்துள்ள ஐந்து திருத்தலங்களில் முதன்மையானதும், கந்த புராணத்தில் குறிக்கப் பெற்றதும்,நலங்கள் எல்லாம் நல்கும் மங்கலம் எனும் பெயரால் விளங்குவதுமாகிய திருமங்கலம் திருவூரில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோவில் சிவாகம் முறைப்படி கருங்கல் திருப்பணி செய்யப் பெற்றதாகும்.தல மரமாக வில்வ மரத்தை பெற்று பெருமை உடையது.ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் கிணற்றை புனித தீர்த்தமாக பெற்றது.தென்திசை காவலனான எமனின் பயத்தை உயிர்களுக்குப் போக்கும் வல்லமையும்,தீர்க்க ஆயுளும்,தீர்க்க சுமங்கலித்துவமும் அருள்பவரும்,மகளிரின் திருமணத் தடைகளை நீக்கி சர்வ மங்கலங்களையும் அருள்பவளுமாகிய அன்னை மீனாட்சி வர பிரசாதியாக தென்திசை நோக்கி அருள் பாலிக்கிறார்.ஸ்ரீமங்கள தெட்சணாமூர்த்தி,+அஷ்ட புஜதுர்க்கை,ஸ்ரீயோக சனீஸ்வரன்,ஸ்ரீகாலபைரவர் சந்நிதிகளும் இத்தலத்தில் சிறப்புடையன.வேம்பும் வில்வமும் அர்த்த நாரீஸ்வர வடிவமாக இணைந்து வளர்ந்துள்ளமை இத்தலத்தின் மகிமையாகும்.
இத்தகைய சிறப்புகள் மிக்க பலநூற்றாண்டு பழமை வாய்ந்த திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் மங்களகரமான நாளான நேற்று அருள்மிகு சொக்கநாத சுவாமிக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மற்றும் விமானத்திற்கும் மஹாகும்பாபிஷேகம் சிவஆகம விதிப்படி நேற்று காலை நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொள்ள கோவிலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை புரிந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கோவிலின் சார்பில் பிரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலிலும்,கோவிலின் சன்னதியிலும் நடைபெற்ற பூஜைகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து புதிதாக காட்சியளிக்கும் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்;பட்டு சிறப்பு பூஜைகள் கடந்த 4நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.அதன்படி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்து வந்து தமிழக வருவாய்த்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் கோபுர விமானங்களில் அமைக்கப்பட்டிருந்த கலசங்களில் வேதமந்திரங்கள் முழங்கிட புனிதநீர்ஊற்றி மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக சர்வ சாதகங்களை மதுரை வேதஆகம ஜோதிடர் சிவஸ்ரீ சந்திர சிவாச்சாரியார்,திருமங்கலம் சிவஸ்ரீ சங்கரநாராயண சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினார்கள்.இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு புல்பேட்டை பகுதியில் வைத்து அறுசுவை அன்னதான விருந்து வழங்கப்பட்டது.இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் மகலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னாள் திண்டுக்கல் எம்.பி.,என்.எஸ்.வி.சித்தன்,மாநில மூவேந்தர் முன்னேற்ற கழக மகளிரணி செயலாளர் ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவரக்கோட்டை வி.செல்வம்,பொறியாளர் ராகேஷ் ஒச்சாத்தேவர்,மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம்,ராஜா சித்தா மருந்தக நிர்வாகி கா.ராஜமுருகன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.