எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் தவறான ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில் அந்த நாடு பொய் பிரச்சாரம் செய்வதாக இந்திய பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.நா. பொது சபையின் 72-வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக குற்றம் சாட்டினார்.
சுஷ்மா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரக நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி 23-ம் தேதி பேசினார். அப்போது தெற்கு ஆசியாவில் தீவிரவாதத்தின் தாயகமாக இந்தியா விளங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பெல்லட் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார்.
அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த பெண் காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா என்பது தெரிய வந்துள்ளது.
அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக சித்தரித்து ஐ.நா. சபையில் அனுதாபத்தை தேடவும் இந்தியா மீது அவதூறு பரப்பவும் பாகிஸ்தான் தூதர் மலீஹா கபட நாடகமாடினார். ஆனால் அவரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமான தால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது.
இந்நிலையில், 25-ம் தேதி பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி பவுலோமி திரிபாதி, பாகிஸ்தான் பிரதிநிதியின் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்போது அவர் பேசும்போது, “இந்த அவையில் ஏற்கெனவே பேசிய பாகிஸ்தான் தூதர் இந்தியா மீது பொய் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு புகைப்படத்தைக் காண்பித்தார். போலியான அந்த புகைப்படத்தைக் காட்டி அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய்யானவை.
சர்வதேச தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ் தான் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்தான் இந்த புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது புகார் கூறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமான தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை, ஹெய்தி லெவைன் என்ற அமெரிக்க புகைப்பட கலைஞர் படம் பிடித்தார். இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 2015-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வெளியானது” என்றார்.
ராணுவ வீரர் படுகொலை
இதையடுத்து, திரிபாதி மற்றொரு புகைப்படத்தைக் காட்டி பேசும்போது, “இது இந்திய இளம் வீரர் லெப்டினன்ட் உமர் பயாஸின் (23) உண்மையான புகைப்படம். போலியானது அல்ல. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள வன்மத்துக்கு இதுதான் சான்று. இந்தப் புகைப்படம் பாகிஸ்தானின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
லோதிக்கு ட்விட்டரில் குட்டு
இதனிடையே ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய மலீஹா லோதிக்கு எதிராக பாகிஸ்தானியர்களே ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.
துணிச்சலான திரிபாதி
ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் இளம் அதிகாரியாக பவுலோமி திரிபாதி பணியாற்றி வருகிறார். இவர் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்.
ஜெனீவாவைச் சேர்ந்த மனித உரிமை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்க ஐ.நா. கவுன்சில் கடந்த ஜூலை மாதம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. குறிப்பாக இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, இந்திய அதிகாரியான பவுலோமி திரிபாதி, “இந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்கக் கூடாது” என தெரிவித்தார். அந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்திருந்ததும் அதன் நிறுவனருக்கு அமெரிக்காவும் ஐ.நா.வும் தடை விதித்திருந்ததுமே இதற்குக் காரணம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல