எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.1 - தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மூலம் விலைக்கு வாங்கி அபகரித்து கொண்டதாக மு.க.ஸ்டாலின் அவரது உதவியாளர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு:-
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரீஸ் சாலையில் வசித்து வருபவர் என்.எஸ்.குமார் (எ) சேஷாத்திரிகுமார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தான் பாதிக்கப்பட்டது பற்றி புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்க மறுத்ததால் தற்போது நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் தெரிவிதிருப்பதாவது:-
நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தந்தையார் காலஞ்சென்ற நாராயணசாமியால் வாங்கப்பட்டு விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று எனது தந்தையால் பெயர் சூட்டப்பட்ட இடத்தில், எனது குடும்பத்தினருக்காக வாங்கப்பட்ட இடத்தில் எனது பங்கிற்காக கிடைத்த 2 1/2 கிரவுண்டு இடத்தில் நான் 4445 சதுர அடி கட்டிடம் கட்டி வசித்து வந்தேன். பின்னர் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இந்த 6 கிரவுண்டு நிலத்தை மு.க.ஸ்டாலின் ஐசிஐசி வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர் அங்கு வந்ததிலிருந்து அருகேயுள்ள எனது வீட்டையும் வாங்கி ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக அங்கு குடியிருந்தவரை மிரட்டி வீட்டை காலிசெய்ய வைத்தனர். அதன்பிறகு தேவி பழனிச்சாமி என்பவருக்கு மாதம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்திருந்தேன். மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் அவரையும் கட்டாயப்படுத்தி வீட்டை காலிசெய்ய வைத்து விட்டார்கள். அத்துடன் சுப்பா ரெட்டி (சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரி ஹோட்டல் அதிபர்), ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து எனது சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். இல்லையென்றால் எனக்கு பல பிரச்சினைகள் வரும் என்று மிரட்டினார்கள்.
அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்துபோய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ய சென்றேன். எனது மனுவை வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு பத்திரப் பதிவாளரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து பி.வேணுகோபால் ரெட்டி பெயரில் எனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள். 5 1/2 கோடி (5,54,50,000) ரூபாய் டி.டி. ஆக கொடுத்தார்கள். அதன்பிறகு சீனிவாசன் எனது வீட்டிற்கு வந்து ரூபாய் 1 கோடியே 15 லட்சம் பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்று இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமானவரி துறையினர் மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதோடு ரூ.15 லட்சத்தை கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். தற்போது இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மு.க.ஸ்டாலினின் மகள் சொந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே என் வீட்டினை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன் கருப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிசோதனை செய்ய வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என் வீட்டை வீட்டு தருமாறும் எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சேஷாத்திரி குமார் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சிக்கி சிறையில் உள்ள நிலையில் அந்த கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் குடும்பத்தாரே அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்ததாக கமிஷனரிடம் வீட்டு உரிமையாளர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.