எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.2 - தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மூலம் விலைக்கு வாங்கி அபகரித்து கொண்டதாக மு.க.ஸ்டாலின் அவரது உதவியாளர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றி விபரம் வருமாறு:-
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரீஸ் சாலையில் வசித்து வருபவர் என்.எஸ்.குமார் (எ) சேஷாத்திரிகுமார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தான் பாதிக்கப்பட்டது பற்றி புகார் அளித்து இருந்தார். புகாரை ஏற்க மறுத்ததால் தற்போது நேற்று முன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அந்த புகாரில் அவர் தெரிவிதிருப்பதாவது:-
நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தந்தையார் காலஞ்சென்ற நாராயணசாமியால் வாங்கப்பட்டு விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று எனது தந்தையால் பெயர் சூட்டப்பட்ட இடத்தில், எனது குடும்பத்தினருக்காக வாங்கப்பட்ட இடத்தில் எனது பங்கிற்காக கிடைத்த 2 1/2 கிரவுண்டு இடத்தில் நான் 4445 சதுர அடி கட்டிடம் கட்டி வசித்து வந்தேன். பின்னர் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இந்த 6 கிரவுண்டு நிலத்தை மு.க.ஸ்டாலின் ஐசிஐசி வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர் அங்கு வந்ததிலிருந்து அருகேயுள்ள எனது வீட்டையும் வாங்கி ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக அங்கு குடியிருந்தவரை மிரட்டி வீட்டை காலிசெய்ய வைத்தனர். அதன்பிறகு தேவி பழனிச்சாமி என்பவருக்கு மாதம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்திருந்தேன். மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் அவரையும் கட்டாயப்படுத்தி வீட்டை காலிசெய்ய வைத்து விட்டார்கள். அத்துடன் சுப்பா ரெட்டி (சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரி ஹோட்டல் அதிபர்), ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து எனது சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். இல்லையென்றால் எனக்கு பல பிரச்சினைகள் வரும் என்று மிரட்டினார்கள்.
அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்துபோய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ய சென்றேன். எனது மனுவை வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு பத்திரப் பதிவாளரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து பி.வேணுகோபால் ரெட்டி பெயரில் எனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள். 5 1/2 கோடி (5,54,50,000) ரூபாய் டி.டி. ஆக கொடுத்தார்கள். அதன்பிறகு சீனிவாசன் எனது வீட்டிற்கு வந்து ரூபாய் 1 கோடியே 15 லட்சம் பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்று இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமானவரி துறையினர் மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதோடு ரூ.15 லட்சத்தை கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். தற்போது இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மு.க.ஸ்டாலினின் மகள் சொந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே என் வீட்டினை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன் கருப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிசோதனை செய்ய வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என் வீட்டை வீட்டு தருமாறும் எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சேஷாத்திரி குமார் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சிக்கி சிறையில் உள்ள நிலையில் அந்த கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் குடும்பத்தாரே அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்ததாக கமிஷனரிடம் வீட்டு உரிமையாளர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் சென்றுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் உதவியாளர் ராஜா சங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது பிரிவு 451, 386, 387, 506 (2), 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.