எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 25 ராவனேஸ்வரன் நகர் , சித்தகவுண்டர் காடு மற்றும் கோட்டம் எண் 27 ல் சின்னப்பன் தெரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர். ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு செய்தார்.
கலெக்டர் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு , துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது. 20 ஆயிரத்து 868 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8 இலட்சத்து 32 ஆயிரத்து 938 பேர் தங்களது உடல் நிலையை பரிசோதித்து , உரிய சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், அம்மா உணவகங்கள், உழவர் சந்தைகள் , காய்கறி மார்க்கெட்டுகள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி , கல்லூரி வளாகங்களிலேயே உரிய இடைவெளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 01.7.2017 முதல் 25.10.2017 வரையிலான நாட்களில் 4 ஆயிரத்து 443 கிலோ அளவிலான நிலவேம்பு பொடியிலிருந்து 1 இலட்சத்து 33 ஆயிரத்து 275 மி.லிட்டர் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு, 25 இலட்சத்து 21 ஆயிரத்து 715 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 12 அரசு பொதுமருத்துவமனைகள், 1 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் மற்றம் செவிலியர்கள் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களும் அடையாளம் காணப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையடையும் என்பதை கருத்தில் கொண்டு, பல முறை பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்கும் படியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் களப்பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள விடாமலும் இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களின் பொதுசுகாதார மேம்பாட்டு பணியினை கருத்தில் கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக எடுக்கப்படும்.
மேலும் புற நகர் மற்றம் மாநகர பகுதிகளில் காலி மனை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் காலி மனைகளை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ், லாரி பணிமனைகள், உணவகங்கள் , தங்கும் விடுதிகள், திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு அவர்களது வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதற்கு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு, தகுந்த அறிவுரை வழங்கி சுத்தம் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது, அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஆர்.ரவி, மாநகர நல அலுவலர், மரு. வி. பிரபாகரன், தாய் சேய் நல அலுவலர் என். சுமதி, உதவி பொறியாளர் வி. திலகா, சேலம் மேற்கு வட்டாட்சியர் வி. திருமாவளவன், சேலம் தெற்கு வட்டாட்சியர் பி.எஸ்.லெனின், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப