எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சிறப்புத் தீர்மானம் அப்போது கொண்டுவரப்படும் என்றும் அறிவித்திருந்தார். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசியல் கட்டிகள் அனைத்தும் ஒரே நிலைபாட்டில் இருப்பதால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலையாகும். ஆனால் இதை மறுக்கும் கேரள மாநில அரசு அங்கு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. இதற்கு அம்மாநில சட்டசபையில் தீரமானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அது கூறிவருகிறது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக கேரள மாநிலத்தலைவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததும், தமிழக போலீசார் தலையிட்டு அதை அடக்கினர்.
கேரள மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து தமிழகம் கேரள மாநிலங்களுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள எல்லையான குமுளி பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். குமிளி, கூடலூர், லோயர் கேம்ப் நோக்கியும், கேரள எல்லைச் சோதனைச் சாவடி நோக்கியும் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் கலைத்தனர். இதனால் பொதுவாக தேனி மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இப்பிரச்சினையை விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டதுடன் கேரள மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கேரள அரசு வீணான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இதனால் அணைப் பகுதியில் பதட்டம் ஏற்படுவதாகவும், இருமாநில உறவுகளில் எத்தகைய பிரிவினை சக்திகளுக்கும் இடம்தரக்கூடாது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த கேரள அரசின் மனு மீது நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு கீழே குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இது கேரள அரசுக்கு பலத்த அடியாகும். இதே நேரத்தில் அணைப்பகுதிக்கு மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருமாநில அரசுகளும் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் கேரள எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் குறைந்துள்ளது.
இச்சூழலில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி இன்று சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் காலை 11.00 மணிக்கு கூடுகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் சிறப்புத் தீர்மானத்தை அரசு கொண்டுவரவுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற உள்ளன.
சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையொட்டி தி.மு.க. இன்று (வியாழன்) நடத்த உள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளன.
ஆகவே அரசின் இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவுள்ளது. இதன் மூலம் தமிழகம் ஒரே குரலில், ஒரே நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தும், சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் தமிழக்ததின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...