எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், தினகரன் மற்றும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்புமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜிஆரின் உருவச்சிலை அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி இருவரும் இனிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.
பிரதமருக்கு அழைப்பு
இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் விழா நடைபெறும். இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களைமீட்க நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கும் வலியுறுத்தியுள்ளோம்.
மறுபரிசீலனை...
ஹஜ்பயணத்தின் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, தமிழக அரசிடம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. தயார்...
ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். மேலும் அவர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.கவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 10 ஆண்டுகள் அவர் கட்சியிலே இல்லை. அவர் எங்கு போனார் என்று கூட தெரியாது. அப்போது கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா? ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மட்டுமே அவரை பெரிது படுத்துகின்றீர்களே தவிர, மக்கள் யாரும் அவரை நினைக்கவே இல்லை.
உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உட்கட்சி பிரச்சனை, குடும்ப பிரச்சனையை யாராவது வெளியே சொல்வார்களா? அதை பற்றி பொதுவெளியில் விவாதிக்கவிரும்பவில்லை. மதுசூதனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவரும் திருப்தியடைந்து விட்டார்.
பிரதமரை சந்திப்பேன்...
இந்தியாவின் நிதி அறிக்கை தாக்கல் செய்வதக்கு முன்னாள் மத்திய அமைச்சரால் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் (ஓ.பன்னீர்செல்வம்) புதுடெல்லி செல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் காவிரி பிரச்னை குறித்து கோரிக்கை வைப்பேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரிநீர் பங்கீடு குறித்தும் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தேவை என மத்திய அரசிற்கும், பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.
பங்கிட்டு தர...
நீதிமன்றத்தில் இடைக்கால வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தீர்ப்புவரஇருக்கிற காரணத்தினாலே இந்த மனுவை ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசை பொருத்தவரையில் இருக்கிற தண்ணீரை சமமாக பங்கிட்டு விவசாயிகளுக்கு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வரும்.
பாதிப்பு இல்லை...
நடிகர் கமல்ஹாசன் தனிக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுபற்றி கருத்து சொல்கிறேன். தனிக்கட்சியானாலும், கூட்டாக கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.கவுக்கு யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. பட்டாசு தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றத்திலும் இது குறித்துவழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை சுமார் ஒரு மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்துவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என்னென்ன நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ஜெயகுமார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வீரமணி, சரோஜா, சீ.வளர்மதி, ராஜலட்சுமி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, ராமகிருஷ்ணரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, எம்.ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள், வி.என்.ரவி, பாலகங்கா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்,எம்,.டி.ரவீந்திரஜெயன், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ஆயிரம்விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.