எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் : நிதி நெருக்கடியை சமாளிக்கவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றும், மற்ற மாநிலங்களை காட்டிலும் இந்த கட்டண உயர்வு குறைவுதான் என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ் கட்டண உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று முன்தினம் பஸ் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண மாற்றங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்தன. பஸ் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
தினமும் ரூ.10 கோடி...
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் புதிய பேருந்துகளும் வாங்கப்படவில்லை. இதனால் தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பை அரசு போக்குவரத்து கழகம் சந்தித்தன. பஸ்களுக்கான எரிபொருள் விலை அதிகரிப்பு, கூடுதல் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் மக்கள் நலன் கருதி கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சில நாட்களாக அரசு உயரதிகாரிகள் பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கட்டணத்தை உயர்த்தி நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடும் நிதிநெருக்கடி...
இந்த நிலையில் கரூர் மாவட்டம் புஞ்சை புகழூரில் ரூ.75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்த கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பேரூந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. போக்குவரத்துத்துறைக்கு கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக்கு பின்பு ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி சுமையிலும் கடந்த 2011-ம் ஆண்டு பிறகு அதாவது 7 ஆண்டுகள் கழித்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்வு என ரூ.4657 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60,000 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.2500 கோடியை முழுமையாக வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் குறைவு...
இதுவரை இல்லாத அளவிற்கு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டுகிறது. ஆந்திராவில் கி.மீட்டருக்கு 63.70 காசும், கேரளாவில் 64 காசும் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பலமுறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 16 முறையும், ஆந்திராவில் 8 முறையில் கேரளாவில் 8 முறையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.900 கோடி பற்றாகுறை
தமிழக மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மிக குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற பகுதிகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்யும் நிலையிலும் சேவை அடிப்படையில் அதிக அளவில் பேருந்துள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. இதனை சரிசெய்யவே இந்த ஆண்டு கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி பற்றாகுறை ஏற்படும். இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பொறுத்துக்கொள்ள...
வரும் காலங்களில் போக்குவரத்துத்துறை நவீனமயமாக்கப்படும். விரைவில் 2000 பேருந்துகள் இயக்கப்படும். நவீன வசதிகளுடன் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிக்கு வர உள்ளது. எனவே இந்த பேருந்து கட்டண உயர்வை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசிற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வரவு குறைவு - செலவு அதிகம்
தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்கு பின்பு தற்போது ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி அரசுக்கு பற்றாகுறை ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல