எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், -விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்டரங்கில் விருதுநகர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் குமார், மாநில அரசின் சார்பில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சந்தோஷ் பாபு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், முன்னிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்தஆய்வுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்ததாவது:-
மத்திய அரசு நிதி ஆயோக் குழுவின் அறிவுரைப்படி சுகாதராம், கல்வி, சாலைவசதி, குடிநீர் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 115 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தனி கவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து அந்த மாவட்டத்தை முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இந்தியாவில் 115 மாவட்டங்கள் 12 துறைகளில் பின்தங்கியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை 2022க்குள் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்தற்கு முக்கிய காரணம் ஏழ்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. மாவட்டத்தில் ஆண் பாலின விகிதத்தை விட பெண் பாலின விகிதம் முன்பைவிட குறைவாக உள்ளது. அதிலும் திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் மிக குறைவாக உள்ளது. திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கியும், இந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையாக உள்ளனர். ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணக்குபாடம் குறித்த திறமை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் நபர்கள் உறுப்பினரகளாக உள்ளனர். இது விருதுநகர் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் ஆகும், எனவே இவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி மாற்று வேலை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக உள்ளதாகவும், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, உணவு, பாதுகாப்பு ,பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, நலிவடைந்த தொழில்துறை மேம்பாடு, வேலைவாய்ப்பை அதிகரித்தல், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தனிகவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு மத்திய, மாநில அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விருதுநகர் மாவட்டத்தை மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். என்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாவது:-
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு, விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும். இந்திய நாட்டை காக்கின்ற பணியில் மிகப்பெரிய பொருப்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைப்படதக்கதாக உள்ளது.
இராஜபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் பகுதிகள் அதிகளவில் மலைச்சார்ந்த பகுதிகளாக உள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் இராணுவ பயிற்சி மையம் அல்லது இராணுவ பயிற்சிப்பள்ளி தொடங்கினால் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும்;, சிவகாசியில் சுமார் 10 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக சுமார் 1 கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுத் தொழிலாளர்களை மத்திய அரசு நினைத்தால்தான் அவர்களுக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க முடியும்;. டில்லியில் தடைவிதித்ததால் இங்கும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடுமோ என பட்டாசுத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்படுகின்றது. அந்த அச்சத்தினை போக்கி அங்குள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் வழிசெய்ய வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் தேர்ச்சி சதவிகிதத்தில் தொடர்ந்து மாநிலத்தில் முதலிடம் வகித்து வருகிறது. இருப்பினும் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான திருச்சூழி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வசதியாக தொழில்நுட்பக்கல்லூரிகள் அமைப்பதற்கு உதவிகள் புரிய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் வைத்தார் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.ஆனந்தகுமார்,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ,மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.