எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் இனி புதிய அணை கட்ட முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பு...
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளிக்கும் போது, தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், கர்நாடகாவை விட தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், எனவே, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு குறைவு...
மேலும், கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவை, தொழில்நிறுவனங்களுக்கான தேவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் காவிரி நீரை பகிர்ந்து அளித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறி 14.75 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கியிருக்கும் சுப்ரீம் கோர்ட், அதனை கர்நாடகாவுக்கு அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
இதுவரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வந்த கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அதனை எப்படி பங்கிட வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. அதன்படி, கடும் குடிநீர் பஞ்சத்துக்கு உள்ளாகியிருக்கும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் கவலை
ஏற்கனவே தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பருவ மழை பற்றாக்குறை காலங்களில் இந்த 177.25 டி.எம்.சி நீரும் கிடைக்குமா என்ற கேள்வியும், பற்றாக்குறை காலங்களில் காவிரி நீரை எப்படி பங்கிடுவது, எந்த அளவுக்கு நீர் கிடைக்கும் என்ற கேள்வியும் தமிழக விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.
மேலாண்மை வாரியம் அமைக்க...
காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
புதிய அணை கட்ட முடியாது
1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
மேல்முறையீடு கிடையாது...
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை...
தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தீர்ப்பின் சிறப்பம்சங்கள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:-
1.காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும்.
2. 2007-ல் நடுவர்மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.
3. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
4. தமிழகத்திற்கான ஒதுக்கீடு குறைப்பால் கர்நாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.
5. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
6. காவிரி நீரை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது.
7. கர்நாடகாவுக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி அளித்த நிலையில் அது 284.75 டிஎம்சியாக உயர்வு.
8. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சியில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.
9. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும்.
10. கேரளா (30 டிஎம்சி) புதுச்சேரி (7 டிஎம்சி) என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.
11. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு.
12. தீர்ப்பின் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடகா நீரைத் திறக்க வேண்டும்.
13.பெங்களூரின் குடிநீர் தேவை, தமிழக நிலத்தடி நீர் இருப்பு குறித்து நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
14. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டு விட்டன.
15. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் சரி செய்யப்பட்டதால் அது இறுதித் தீர்ப்பாக இருக்கும்.
16. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
17.நடுவர் மன்ற உத்தரவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
18. சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லும்.
19. சென்னை, மைசூரு மாகாண ஒப்பந்தங்களின்படி, காவிரியில் தமிழக அனுமதியின்றி அணை கட்ட முடியாது.
20. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.