எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஏ மற்றும் பி பிளாக் கட்டிடங்களை இணைக்கும் கட்டிட இணைப்பு பாலம் என ரூ.9.21 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அடிக்கல் நாட்டினார்கள். இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் அனிதா சுமான்த், எம்.வி.முரளிதரன், டிகாராமன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்ககொண்டனர்.
புதிய கட்டடம்
இவ்விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். கலெக்டர்; சி.அ.ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் நீதித்துறை சிறப்பாக இயங்கி வருகிறது. மாவட்டத்தில் இன்றைய தினம் ஆற்காடு நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.378.12 இலட்சம் மதிப்பீட்டிலும். நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.377.2 இலட்சம் மதிப்பீட்டிலும், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ94.43 இலட்சம் மதிப்பீட்டிலும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஏ மற்றும் பி பிளாக் கட்டத்தை இணைக்கும் கட்டடிட இணைப்பு பாலம் ரூ.20.97 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆகமொத்தம் ரூ9.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடித்திற்கு அடிக்கல் நாட்டப்படுவது மிகவும் மகிழச்சியளிக்கிறது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அவர்களின் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதித்துறையை மிகவும் மதித்து தங்கள் பிரச்சனைகளை களைய நாடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை கணிவுடன் தீர்த்து வைக்க நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அந்த நீதித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசினார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா நல்லாட்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலக கட்டடங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் அம்மா கொள்கை முடிவு எடுத்தார். அதன் விளைவாக பல்வேறு துறை கட்டடங்கள் சொந்த கட்டத்தில் இயங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் தற்போது அழகான சொந்த கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் அக்கோரிக்கையினை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஆற்காடு அரக்கோணம் நீதிமன்ற புதிய கட்டடங்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டிட இணைப்பு பாலங்கள் ரூ.9.21கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நீதித்துறைக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகப்படியான மகிளா நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. அதிக அளவில் பெண் வழக்கறிஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்று நீதித்துறைக்கு தொடர்ந்து தன்னுடைய பங்கை அளித்து நீதித்துறை சிறப்பாக செயல்பட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு உடனுக்குடன் வழங்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரேம்சந்தர், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, பார் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் நந்தகுமார், ரவி, ராமன், டி.ரவி, தினகரன். காஞ்சனா அறிவழகன், வேலூர் மாவட்ட முதன்மை வழக்கறிஞர் ராஐ_ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.