எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடப்பா : ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 பேரின் உடல் அடையாளம் தெரிந்தன.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், திருப்பதி-கடப்பா நெடுஞ்சாலையில் ஒண்டிமிட்டா எனும் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை 7 சடலங்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு, 5 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் சிலரின் சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்தவர்களின் சடலங்களைப் பார்த்தால் அவர்கள் இறந்து சுமார் 2 அல்லது 3 நாட்கள் ஆகி இருக்கலாமென கருதப்படுகிறது. சிலரின் உடல்களில் கை,கால் முதலான உறுப்புகளில் காயங்கள் உள்ளன. சிலர் செருப்பு அணிந்து உள்ளனர். அவர்களது பைகளும் தோளில் உள்ளன. அனைத்துச் சடலங்களும் ஏறக்குறைய ஒரே இடத்தில் கிடந்தன. இந்த ஏரி முழுவதும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. ஏரி மற்றும் ஏரியைச் சுற்றிலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்த ஏரியில் அதிகபட்சமாக 6 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அப்பகுதி கிராமத்தினர் கூறுகின்றனர்.
போலீஸார் கூறுவதுபோல், போலீஸாரிடமிருந்து தப்பி ஓடி செல்லும்போது ஏரியில் குதித்து மறுகரையில் உள்ள வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த சேற்றில் ஓடக்கூட முடியாது என்கிறார்கள். அப்படியே ஓடினாலும், முன்னால் செல்பவர் சேற்றில் சிக்கி இருந்தால், பின்னால் வந்தவர்கள் அனைவரும் அதே வழியில் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இது வேண்டுமென்றே செய்த சதி என்றே தெரியவந்துள்ளது என்கிறார்கள்.
ஏற்கெனவே திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். இதனால், இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இது மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையமும் எச்சரித்தது. ஆனால் இதனை ஆந்திர அரசு கண்டுக்கொள்ளவில்லை. செம்மரம் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த ஆந்திர போலீஸார் இம்முறை என்கவுன்டர் செய்யாமல், இவர்களை அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாமென கூறப்படுகிறது.
இந்நிலையில், கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை போலீஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்தனர்.
இறந்தவர்களின் பைகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு பெண், ஆண் ஆகியோரின் புகைப்படங்களும், சில செல்போன் எண்களும் இருந்தன. ஒரு காகிதத்தில் ராமு, குமார், சேலம் என எழுதி அவர்களின் செல்போன் எண்களும் உள்ளன. மற்றொரு காதிகத்தில் சக்தி என எழுதப்பட்டு அதில் செல்போன் எண் குறிப்பிட பட்டுள்ளது. மேலும் “ஸ்ரீ லலிதா” டெக்ஸ்டைல்ஸ், கருமந்துறை எனும் ஒரு மஞ்சள் பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த அடையாளங்களை வைத்து நேற்று காலை முதல் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன் ஆகிய இருவர் என அடையாளம் தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ஆந்திர போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களின் விவரங்கள் தெரியவேண்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விவரங்கள் தெரிந்தாலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலோ 91211 00565, 91211 00581, 91211 00582 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாமென கடப்பா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்
பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட கடப்பா மாவட்டம், ரிம்ஸ் அரசு மருத்துவமனை முன், நேற்று காலை மனித உரிமை சங்கத்தினர் அதன் தலைவர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல