முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ள சோக்ஸியுடன் மே.வங்க அமைச்சர் படம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ள மெஹுல் சோக்ஸி, மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பா.ஜ.கவினர் வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், பிரதமர் மோடி டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டிற்கு அழைத்துச் சென்ற தொழிலதிபர்கள் குழுவில் நிரவ் மோடி இடம் பிடித்ததாக கூறி, புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் பங்குதாரர் மெஹுல் சோக்ஸியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் வெளியிட்டுள்ளார். மேலும், மேற்குவங்க மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில் மெஹுல் சோக்ஸி கலந்து கொண்டது எப்படி? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோசடி குறித்த தகவல் வெளியானதும், அரசு இணையதளத்தில் இருந்த அந்த புகைப்படத்தை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது, பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் நடவடிக்கை என திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து