முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாண்டிங்கை கட்டுப் படுத்தினால் ஆஸி.யை வென்று விடலாம் - கபில்தேவ் பேட்டி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 25 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிக்கி பாண்டிங்கை கட்டுப் படுத்தினால் ஆஸி.அணியை வென்று விடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் கூறியிருக்கிறார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி கடந்த 15 வருடகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனாலும் முன்பு மாதி ரி இப்போது வலுவாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.  ஏன் என்றால் முன்பு ஆஸ்திரேலிய அணியில் நம்பகமான மூத்த வீரர் கள் இருந்தனர். அவர்களது பக்க பலத்தால் அந்த அணி  டெஸ்ட் போ  ட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது. உலகின் நம்பர் - 1 அணியாக வலம் வந்தது.  முக்கியமாக மெக்ராத், கில்கிறிஸ்ட், வார்னே மற்றும் ஹெய்டன் போன்ற சிறந்த வீரர்களின் ஓய்வுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி சர்வ தேச போட்டிகளில் எதிரணிகளிடம் திணறி வருகிறது. அதே நேரத்தில், இந்திய அணியில் டெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் சேவாக் போன்ற வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். சிறப்பாக பந்து வீசக் கூடிய இளம் வீரர்களும் இடம் பெற்று உள்ளனர். எனவே இந்திய அணி இந்தத் தடவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரா  ன தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இதை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆபத்தானவர். அவர் நல்ல அனுபவம் பெற்ற வீரராவார். அவர் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்பு உள்ளது.
அவரை மட்டும் கட்டுப் படுத்தி விட்டால் ஆஸ்திரேலிய அணியை நமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். எனவே எளிதா க வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் மே.இ.தீவு அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொ  ண்டது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியை இந்தியா அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாகும். எனவே அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருக்கும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்