எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சமூக விரோதிகள் எவராயினும், பாரபட்சமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3-வது நாள் கூட்டம்
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் மாநாடு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். 2-வது நாளில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்கள், அரசுதுறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. நேற்று போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
அமைதிப் பூங்காவாக...
காவல் துறையினர் தங்களது பணியினை ஆற்றும் பொழுது ஏற்படும் எதிர்மறையான விமர்சனங்களை பொருட்படுத்தாமலும், தங்களது குடும்பத்தினருடன் கூட நேரம் செலவிட முடியாமலும், நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணி ஆற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டும் பணிபுரிகின்றனர். ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்பில் எதிரிகளுக்கு எதிராக போராடுகின்றனர். காவல் துறையினர் உள்நாட்டில் உலவும் சமூக விரோதிகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கும், பயங்கரவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் இல்லாமல், கட்டுப்படுத்தியதற்காகவும், காவல் துறைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து முதலிடம்
களவு போன சொத்துக்களை மீட்பதில், 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளாக நாட்டிலேயே நமது மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதற்காகவும், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மெட்ரோ நகரமாக சென்னையும், முதல் பெரிய நகரமாக கோயம்புத்தூரும் திகழ்ந்து வருவதற்காகவும், உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திற்கு பெருமை
அகில இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களாக கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை அண்ணா நகர் காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காவல் துறையினருக்கான பணித் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு அதிக பதக்கங்களுடன் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது காவல் துறையினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முற்றிலும் தவிர்க்க....
மதவாதம், பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களை பாதுகாக்கின்ற காவல் நிலையங்களில் இறப்பு ஏற்படுவது என்பது, மக்களிடையே காவல்துறை மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும். எனவே, காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை காவல் துறையினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக விரோதிகள் எவராயினும், பாரபட்சமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் புரிந்து விட்டு உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு தப்பி ஓடும் பல நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன.
முன்னெச்சரிக்கை ...
இச்செயல்களுக்கு உடந்தையாக இருந்து, பரஸ்பரபுரிதலுடன் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ்நாட்டில் உள்ள சமூக விரோத சக்திகளையும் ஒன்றாகக் கண்டறிந்து அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை தூண்டுவோர் குறித்த தகவல்களைச் சேகரித்து, உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி, அதன் மீது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் சுணக்கம் காட்டுவதோ, காவல் நிலைய எல்லையைக் காரணம் காட்டி புகார்தாரர்களை அலைக்கழிப்பதோ கூடாது.
சிலை திருட்டை...
மக்களை பாதிக்கும் பொது விநியோக அரிசி கடத்தல், மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, போதை மருந்து கடத்துதல், பொருளாதார குற்றங்கள், சூதாட்டம், திருட்டு விசிடி, வீடியோ கேம்ஸ் போன்ற சமுதாய குற்றங்களின் மீது தனி கவனம் செலுத்தி, அக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலங்களில் சிலை திருட்டு தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றின் மீது தனிக் கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து, களவு போன சிலைகளை மீட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுத் தர காவல் துறையினர் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்பட...
மேலும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தும் கூட்டங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்து, எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வகையிலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வந்த போதிலும், ஒரு சில சமயங்களில் ஆங்காங்கு நடைபெறும் சில சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் தொய்வு ஏற்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, ஒரு சிலர் குறை கூற ஏதுவாக அமைந்து விடுகின்றது. அது போன்ற சம்பவங்களும் நடவாமல் தடுத்து, உங்கள் பணிகளை மேலும் சிறக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.