எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25,000ஃ- மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரிப் படிப்பு முடித்த 150 நபர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50,000ஃ- மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64,80,000 மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1,12,50,000- மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, நேற்று (14.03.2018) நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
எம்எல்ஏ பேச்சு
இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் மகளிருக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தினார்கள். பொதுவாக ஆட்சியாளர்கள் நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா ஒருவர் மட்டுமே ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தினார்கள்.
அதில் சிறப்பான ஒரு திட்டம்தான் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகும் என்றார். பெரம்பலூர் எம்எல்ஏ அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா ஏழைப் பெண்களின் திருமணங்களை நடத்தும் வகையில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் அவர்களும், பெண்ணினத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், வேப்பந்தட்டை வட்டத்தில் சுமார் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் சின்னமுட்லு அணைக்கட்டு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களின் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு ரூ.9.14 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரிக்கு இணையான வசதிகளுடைய மருத்துவமனையாக பெரம்பலூர் தலைமை மருத்துவமனையை மாற்றும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், பிரசவித்த பெண்களுக்கு அம்மாப் பெட்டகம் வழங்குதல், பிரசவித்த தாய்மார்களுக்கு பேறுகால நிதியுதவி, சமூகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு, பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்கள் அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று மாவட்ட கலெக்டர் பேசியதாவது:தமிழகஅரசு பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாகவும் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, பெண்களுக்காக மகப்பேறு நிதியுதவி திட்டம், உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. பெண்குழந்தைகளை நாம் போற்ற வேண்டும். பெண்களுக்கான முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம். எனவே, பெண்களை மையமாக வைத்து தமிழக அரசு வழங்கிவரும் திட்டங்களை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்தி பெண்கல்வியினை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இதன்காரணமாக பெண்களின் உடல்நலம் மேம்படுவதுடன் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளும் உருவாக வழிவகை ஏற்படும். மேலும் இக்காலத்தில் பெண்கள் அனைவரும் சிறுதொழில், கைத்தொழில் என சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பெண் குழந்தைகளை போற்றி வளர்த்து அவர்களுக்கு தேவையான, ஆண்களுக்கு இணையான அனைத்து வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல