எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 3 - பிரபல நடன ஆசிரியர் கே.ஜெ.சரசா திடீர் மாரடைப்பில் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது72.மந்தவெளியில் சரசாலயா என்னும் பெயரில் நாட்டிய பள்ளியை நடத்தி வந்தவர் கே.ஜெ.சரசா.முதல்வர் ஜெயலலிதாவின் நாட்டிய குரு இவர். இதேபோல கமலஹாசன், டான்ஸ் மாஸ்டர் ரகுராம், ஷோபனா, சொர்ண மால்யா, ஊர்மிளா சத்யநாராயணன் ரத்னகுமார் மற்றும் நாவலாசிரியர் சிவசங்கரி உள்ளிட்ட பிரபலங்கள் இவரிடம் நடனம் பயின்றுள்ளார்கள்.நாட்டியமே மூச்சாச வாழ்ந்தவர் கே.ஜெ.சரசா. வழுவூர் பாணியில் நாட்டியம் சொல்லிக் கொடுத்தவர். 1000-க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களை நடத்திய ஆபூர்வ நாட்டிய கலைஞர். பெண் நட்டுவனராக மேடை ஏறிய முதல் கலைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. வைஜெயந்தி மாலா, பேபி கமலா, லலிதா - பத்மினி - ராகினி சகோதரிகள் உள்ளிட்ட பிரபலங்கஙளுக்கு நட்டுவாங்கம்செய்திருப்பவர். 1960-ம் ஆண்டு சரசாலயா என்னும் பெயரில் நாட்டிய பள்ளியை துவக்கினார். கடைசி வரை நாட்டியமே மூச்சாக வாழ்ந்தார் இவரை மாதிரி ஒரு குரு கிடைப்பதே அபூர்வம் என்று அனைத்து தரப்பினாரலும் வெகுராகப் பாரட்டப்பட்டவர். நாதஸ்வரக் கலைஞர் ஜெகதீசன் பிள்ளையின் மகள், ஆரம்பக் கட்டத்தில் காரைக்காலில் இருந்தார். முத்துக்குமாரப் பிள்ளையிடம் ஆரம்பத்தில் நாட்டியம் பயின்றவர், மேற் கொண்டு வழுவூர் ராமையா பிள்ளையிடம் பயின்றார்.பின்னர் சென்னைக்கு வந்து ராமையா பிள்ளையிடம் குருகுல வாசம் ஸ்டைலில் 10 ஆண்டுகள் நாட்டியம் கற்றார். அதன்பின்னர் நாட்டியத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த ஒரு விசேஷ பேட்டியில், நாட்டியம்.., நாட்டியம்... நாட்டியம் அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார். சரசா டீச்சர் என்று மாணவிகளால் அன்போடு அழைக்கப்பட்டவர். நாட்டியம் பயின்றவர், ஆட விரும்பினார். ஆனால் வாழ்க்கை முழுவதும் நீ சொல்லிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். காலில் சலங்கை கட்டி ஆடக்கூடாது என்று குரு கட்டளையிட்டர். அதை அப்படியே ஏற்று நட்டுவாங்கம் செய்வதோடு மட்டும் நின்றார். தான் ஆடவில்லையே... என்று ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. குரு சொன்னது சரிதான்... அவர் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பேன் என்று சொல்லி அப்படியே வாழ்ந்து காட்டியவர். இவர் சிறு வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். அதனால் நாட்டியம் பயிற்றுவித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இவர் தலையில் விழுந்தது. 4 சகோதரிகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். இசை - நாட்டியத்தில் ஆர்வம். கிருஷ்ண பாரிஜாதம், ஆதித்ய ஹ்ருதயம், சிலப்பதிகாரம், குன்றக்குடி குறவஞ்சி, தேசபக்தி, குற்றாலக் குறவஞ்சி ஆகிய இவரது படைப்புகள். மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவை. கலைமாமணி, சொர்ணகமலம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். திருமணமாகாத இவர், தங்கை கீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரமாக தத்தெடுத்துக் கொண்டார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் மனைவி. கே.ஜெ.சரசாவின் உடல் இன்று பெசன்ட் நகரில் தகனம் செய்யப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.