எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை பந்துவீச்சை சிதறடித்து வெற்றி பெற வைத்தார் சீனியர் வீரரான, பிராவோ.
பந்து வீச்சு தேர்வு
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. இரண்டாண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே களத்திற்கு திரும்பியுள்ளதால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு, சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும், ஷேன் வாட்சனும் நெருக்கடி கொடுத்தனர்.
மும்பை அதிரடி...
மும்பை தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ், ரன் எதுவும் எடுக்காமால் தீபக் சாஹரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் கேட்ச் ஆனார். பின் இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள்தான் எடுத்திருந்தது. பின்னர் அந்த அணி அதிரடி காட்டியது. சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.
165 ரன்கள்...
இறுதிக்கட்டத்தில் பாண்ட்யா சகோதரர்கள், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். குணால் பாண்டயா 22 பந்தில், 41 ரன்களும் ஹர்திக் 20 பந்துகளில் 22 ரன்களும் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய ஹர்திக் பாண்ட்யா, சென்னையின் பிராவோவுடன் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றனர். சென்னை தரப்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆரம்பமே அதிர்ச்சி...
பின்னர் களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் முதலில் தடுமாறி, அதிரடியில் இறங்கிய போது ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். அவர் 16 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 22 ரன்களில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா (4), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) என யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த கேதர் ஜாதவ், காயம் காரணமாக வெளியேற, சென்னை அணி தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியானது.
பிராவோ அபாரம்...
இந்நிலையில் களமிறங்கிய பிராவோ, ’ஒத்தையாக’ போராடினார். 18 -ஓவரை மேக்லஹென் வீச, அந்த ஓவரில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தார். அதுவரை டிரெஸ்சிங் ரூமுக்குள் உட்கார்ந்து சோகமாக பார்த்துக்கொண்டிருந்த சென்னை அணியினருக்கு பிராவோவின் அதிரடி நம்பிக்கை அளித்தது. பிறகுதான் சிரிக்கவே ஆரம்பித்தார் டோனி.
68 ரன்கள் குவித்தார்
அடுத்து 19-வது ஒவரை பும்ரா வீசினார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான இவரது பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பதற்றத்தைத் தணித்த பிராவோ, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட் ஆனார். அவர் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரியும் 7 சிக்சர் அடங்கும்.
பவுண்டரி அடித்து...
பின்னர் காயம் காரணமாக பாதியில் வெளியே சென்ற கேதர் ஜாதவ் வந்தார். பங்களாதேஷின் முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். முதல் மூன்று பந்துகளை விட்டுவிட்ட கேதர், டென்ஷனை அதிகரித்தார். ஆனால் அடுத்த பந்தில் சிக்சர் பறக்கவிட்டதும் திரில் அதிகரித்தது. வெற்றிக்கு 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார் காயத்துடன் ஆடிய ஜாதவ்.
ஹர்திக் பாண்ட்யா...
சென்னை அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் மார்கண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது பிராவோவுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்