எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன் தங்க பதக்கம் வென்றார்.
ஆண்கள் குத்துச்சண்டை பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் ஆஸ்திரேலியாவின் ஹாரி கார்சைட் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணீஷ் கவுசிக் 3-2 என்ற செட் கணக்கில் ஹாரி கார்சைட்டிடம் தோல்வி அடைந்தார். நூலிழையில் தங்க பதக்கத்தை தவற விட்டார். இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை அவர் கைப்பற்றினார்.
குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். அவர் வடக்கு அயர்லாந்தின் பிரெண்டன் இர்வைன் உடன் மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று கவுரவ் சோலாங்கி தங்கப் பதக்கத்தினைத் தட்டிச் சென்றுள்ளார். இது இந்தியாவுக்கு நேற்று கிடைத்த 2வது தங்கம்.
ஆண்களுக்கான 46-49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமிட் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாய் இடம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரி கார்சைட் இடம் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 91 கிலோவுக்கு அதிகமானோர் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சதிஷ் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். நேற்று நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் மேரிகோம் 4-0 என வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 43 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடந்து நீடித்தது.
ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ்: பதக்கம் வென்றார் மணிகா பத்ரா
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா, சிங்கப்பூரின் மெங்யூ யூவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மணிகா பத்ரா, 11-7, 11-6, 11-2, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 24வது தங்கப்பதக்கமாகும்.
கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - சவுரவ் கோசல் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா 24 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் - ஷரத் அச்சந்தா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
மல்யுத்தம்: வினேஷ் போகத் தங்கம் வென்றார்
மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுமித் தங்கப்பதக்கம் வென்றார்.
மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்டை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கனடாவின் அலெக்சாண்டர் மூரை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
பேட்மிண்டன்: இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா - குரோன்யா சோமர்வில்லே ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது.
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், இங்கிலாந்து வீரர் ராஜிவ் அவுசப்பை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை 21-14, 18-21, 21-17 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயை எதிர்கொண்டார். இதில் 21-18, 21-8 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்று பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாய்னா நேவாலுடன் பலப்பரீட்சை செய்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்பொழுது? - தேர்வு வாரியம் அறிவிப்பு
04 May 2024சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.