எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலம் தமிழகத்திற்கு தெலுங்கானா - ஆந்திரா வழியாக 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பேசினார்.
சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து குரங்குசாவடி வரை ரூ.82.27 கோடி மதி்ப்பில் கட்டப்பட்ட புதிய பால திறப்பு விழா, ஆட்டையாம்பட்டி - மொசக்காளிப்பட்டியில் புதிய பால திறப்பு விழா, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் மற்றும் தாரமங்கலத்தில் புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல், சேலம் மணல்மேடு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி பாஜிபாகரே வரவேற்று பேசினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்,சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,சேலம் மேற்கு தொகுதி எம்.எல்..வுமான ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு தலைமை தாங்கி பாலங்கள் மற்றும் காவல் நிலையத்தை திறந்து வைத்தும்,புதிய சாலை மற்றும் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இன்றைக்கு நீரினுடைய அவசியம் மிக முக்கியம். எல்லா நதிகளுமே பக்கத்து மாநிலத்திலிருந்து உற்பத்தியாகித்தான் நம்முடைய மாநிலத்திற்கு வருகிறது. காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது, முல்லைப் பெரியாறு கேரளாவில் உற்பத்தியாகிறது, பாலாறு ஆந்திராவிலிருந்து உற்பத்தியாகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் நான் வலியுறுத்திச் சொன்னேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னைக்கு வருகை தந்த பொழுது என்னிடத்தில் சொன்னார், நீங்கள் கடிதம் எழுதினீர்கள், பாரத பிரதமரிடத்திலும் கோரிக்கை வைத்தீர்கள். இன்றைக்கு கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம், ஆகவே, கோதாவரியில் அதிக நீர் வருகின்றது. அந்த நீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக நம்முடைய பகுதியாகிய மாயனூர் கேரேஜ் என்னும் இடத்தில் அந்த தண்ணீரை கொண்டு வந்து இணைக்க வேண்டும். அப்படி கோதாவரி தண்ணீர் 125 டி.எம்.சி. நமக்கு கொடுப்பதாக மத்திய அரசால் திட்டம் தீட்டப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நிலையான நீர் கிடைக்கும். மேட்டூர் அணையில் இருக்கும் அந்த நீர் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் வரை கால்வாய் வெட்டி அதன் மூலமாக ஆங்காங்கு இருக்கின்ற ஏரிகளை நிரப்புகின்ற பொழுது மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்தியாவிலேயே வேளாண் துறை, மருத்துவத் துறை, அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்கக்கூடிய நிலை தமிழகத்திலே பார்க்க முடிகின்றது. கல்வித் துறையில் இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் தான் முன்னிலை வகிக்கின்றது. சாலை போக்குவரத்திலும் தமிழகத்தில்தான் சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது. அந்த அளவிற்கு அம்மாவினுடைய அரசு எல்லா துறைகளிலும் வளர்ச்சியை காண்பதற்கு திட்டங்களை தீட்டியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செ.செம்மலை, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா, ஏற்காடு சித்ரா, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் ஆவின் சேர்மன் சின்னதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.எம்.கே.செல்வராஜ், முன்னாள்மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் எம்.நடேசன், சேலம் மாநகர் மாவட்ட பகுதி கழக செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை அதிகாரி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.