எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த், ஜன.14 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் 161 ரன்களில் சுருண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய மூன்றாவது டெஸ்டை வென்றே தீர வேண்டிய கட்டாய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை.
இந்நிலையில் நேற்று காலை பெர்த்தில் உள்ள டபிள்யூ. ஏ.சி.ஏ. மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த மைதானத்தில் இந்திய அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்திய துவக்க வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணிக்கு துவக்கம் மீண்டும் சரியாக மையவில்லை. இந்திய அதிரடி வீரர் சேவாக் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் வழக்கம்போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய ராகுல் டிராவிட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எண்ணிக்கை 32 ஆக இருந்தபோது, ஹில்பின்ஹாஸ் பந்தில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிராவிட் போல்டானார். அடுத்து 99 வது சதத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் சச்சின் களமிறங்கினார். இவர் 15 ரன்களை எடுத்திருந்தபோது இந்த தொடரில் முதன்முதலாக களமிறக்கப்பட்ட ரியான் ஹாரிஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் சச்சினை அவுட்டாக்கி அவரது நூறாவது சத கனவை தகர்த்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து லட்சுமன் களமிறங்கினார். அதுவரை தாக்குப்பிடித்த காம்பீர் 31 ரன் எடுத்த நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக இளம் வீரர் விராட் ஹோக்லி லட்சுமனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இதனால் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 131 க்கு உயர்ந்தபோது 44 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோக்ளி, சிடிலின் பந்துவீச்சில் வார்னரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்திலேயே லட்சுமன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிடிலின் பந்திலேயே கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹோக்ளி, லட்சுமன் ஜோடி 5 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அதிகபட்சமாக 68 ரன்களை சேர்த்தது. அடுத்தபடியாக இந்திய கேப்டன் தோனி அடித்த 12 ரன்களே அதன்பிறகு வந்த இந்திய வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்திய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இந்திய அணி 60.2 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி தரப்பில் ஹில்பின்ஹாஸ் 4 விக்கெட்டுகளையும், சிடில் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கோவன் ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சு ஆஸி. வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் 23 ஓவர்களில் அதிரடியாக 149 ரன்களை குவித்தனர். இதில் வார்னர் 80 பந்துகளில் 104 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு துவக்க வீரர் கோவன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் நாளிலேயே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி உள்ளது. பெர்த் டெஸ்ட்டும் மிக மோசமான தோல்வியை கொடுப்பது உறுதி என்ற நிலையில் இந்திய அணியின் நிலை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.