எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது எனவும், எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது என்றும் அந்த விவகாரத்தில் பிரதான சாமி சுப்ரீம் கோர்ட்தான் எனவும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு இல்லையா?
காவிரி விவகாரத்தில் இனி கட்டப் பஞ்சாயத்து தேவையில்லை. அந்த நிலைமையைத் தாண்டியாகி விட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும், கடமையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உண்டு. இதில், மநில அரசின் பங்கை விட ஆணையத்தின் பங்கு தான் அதிகம். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்பதற்கெல்லாம் இங்கே வழியில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றும் என நம்பிக்கை உள்ளது. குமாரசாமியோ, நாராயணசாமியோ எந்த சாமியும் ஆணையிட முடியாது. பிரதான சாமி காவிரி மேலாண்மை ஆணையம் தான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் அருள்வாக்கு.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வில் இணையத் தயாராக இருப்பதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறதே?
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அடிமட்டத் தொண்டர்கள் என யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக கட்சிக்கு திரும்புவார்கள். அதுதான் காலத்தின் கட்டாயம். கட்சிக்குள் மீண்டும் வந்தே தீர்வார்கள்.
டி.டி.வி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறதா? யார், யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது?
அது ரகசியமானது. தற்போதைக்கு சொல்ல முடியாது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதை பிரதமர் நிராகரிக்கிறாரா? கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரை சந்தித்திருக்கிறாரே?
கர்நாடக முதல்வர் பிரதமரைச் சந்தித்தாலும் அது வீண் தான். கர்நாடக முதல்வர் சந்திப்பால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி எதையேனும் செய்ய முடியுமா? அவர் சீன் வேண்டுமானால் போடலாம். அதனால் ஒரு பிரயோஜனமும் கர்நாடகத்திற்கு ஏற்படாது. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றும். இதுகுறித்து பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தி விட்டோம். பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
அந்தச் சட்டம் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதனால், மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுதான் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் டெல்லியில் வலியுறுத்தியிருக்கிறார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
மக்கள் அமைதியாக வாழ்வதற்கு காவல்துறை முக்கியம். சட்டத்தை மதிக்க வேண்டும். இது கற்காலம் அல்ல. சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. ஒரு மாநிலம், நாடு, குடிமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என வரையறைகள் இருக்கின்றன. யாரும் சட்டத்திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மக்களைத் தூண்டுவதாகவோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவோ இருந்தால் தான் காவல்துறை கைது செய்வர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. யாரையாவது கைது செய்திருக்கிறோமா? பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அரசு ஏற்காது. மக்களின் ஒருமித்த கருத்தின்படியே எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.