எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்: மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் இதுகுறித்த திட்ட அறிக்கை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆலோசனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
மத்திய குழுவினர்...
மறைந்த முதல்வர் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவவசதிகள் கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட ஒப்புக்கொண்ட மத்திய அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக குழுவினரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அதன்படி மதுரை தோப்பூர் உள்ளிட்ட 5 இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர் அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.
மத்திய அரசு அனுமதி...
இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் 100 இடங்களை கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் 200ஏக்கரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட அனுமதியளித்து மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நேரில் ஆய்வு...
இதனிடையே தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி தென்மாவட்ட மக்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்றிடும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டதுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் வரைபடத்தினை பார்வையிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான விளக்கங்களை மதுரை கலெக்டர் கொ. வீரராகவராவ் விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு ஆலோசனை...
இதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்கள். பின்னர் அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நடைபெற்றது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையை இரண்டு ஆண்டுகளுக்குள் விரைவாக அமைப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ)செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன்,வில்லாபுரம் ஜெ.ராஜா, கு.திரவியம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி,தமிழ்ச்செல்வம், ஓம்கே.சந்திரன். முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் அன்பழகன், மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கட்சி நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன். கபிகாசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன். நெடுமாறன், பெரியசெல்வம், கேபிள் பார்த்தசாரதி, வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.மருதுபாண்டியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேட்டி...
ஆய்வுக்குப் பின் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதல்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் தான். இதற்கு முன்பாக பின்தங்கிய மாநிலங்களான பீகாரில் பாட்னாவிலும், ஒரிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் தமிழகத்தில் தற்போது அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்டதாக செயல்படும்.
முதல்வர் உத்தரவு
இதற்கு தேவையான அரசு நிலம் 192.7 ஏக்கருக்கு தடையில்லாச் சான்று தயார் நிலையில் உள்ளது. 20 மெகாவாட் மின்சார இணைப்பு தயாராக இருக்கிறது. 5 எம்.எல்.டி தண்ணீர் வழங்கிட அனைத்து வசதிகளும் உள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை வேகமாக நடத்தி முடித்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளும் அதற்கான துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அனைத்து வசதிகளும் முழுமைப்படுத்தப்படும்.
இன்று அறிக்கை தாக்கல்
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பான திட்ட அறிக்கை உடனடியாக தயாரிக்கப்பட்டு நாளையே (இன்று) முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தோப்பூர் பகுதியில் ஏற்கெனவே நான்குவழிச்சாலை இணைப்பு இருக்கிறது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளதால் தண்ணீர் பிரச்சனை வந்திட வாய்ப்பு கிடையாது. அத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் நூறு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமும் 750 படுக்கை வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.
மல்டி ஸ்பெசாலிட்டி...
இதையடுத்து மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் தலா 150 கோடியில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு உலகவங்கி தற்போது ரூ.2685 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ள சுகாதாரத்துறையின் திட்டங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இத்தகைய சிறப்பு மிகு திட்டங்களால் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.