எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி ,- தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்; பாதுகாப்பு நிலை மற்றும் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைத்துப்பிரிவு பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சமூகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய பேரிடர்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 360 அலுவலர்கள் பணிபுரிவதுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இவ்வாறாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் திட்டமிட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பேரிடர் பாதுகாப்பு நிலையினை உருவாக்கிட வேண்டும்.
பணியிடங்களில் இடர் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவிப்பு பலகைகள் அமைத்திட வேண்டும். மின் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் தீ விபத்து, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்துவதற்காக, கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தீக்குளித்தல், மின்தடை காரணமாக தானியங்கி ஏணி (டுகைவ) இயந்திரம் இயங்காமல் நின்று விடுதல், நிலநடுக்கம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளின் போது ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதுடன், தொடர்ந்து தங்களின் பங்களிப்பினை வழங்குவதன் மூலம் மட்டுமே பாதிப்பில்லா சூழ்நிலையை ஏற்படுத்திட முடியும்.
அலுவலக வளாகத்தில் 80 இடங்களில் தீயணைப்புக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 16 இடங்களில் கண்காணிப்புக்கேமராக்கள் (ஊஊவுஏ) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தீ விபத்தினை அறிவிக்கும் ஒலிப்பான் (ர்ழசn) தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலைகளில் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டி வருவாய் பொதுப்பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தின் போது ஏற்படும் அவசர சூழ்நிலை, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது குறித்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நிர்வாகம் வகுத்துள்ள பாதுகாப்பு கொள்கைகளையும், பாதுகாப்பான செயல்பாடுகளையும் முறையாக கடைபிடித்தல் வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளுடன், பிற பணியாளர்களின் நலனையும் ஒட்டுமொத்த அலுவலக நலனையும் கருத்தில் கொண்டு பொறுப்பறிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். அலுவலக வளாகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நிகழ்வுகள், அபாயகரமான செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக உரிய அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மருத்துவத்துறை சார்ந்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்துப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து தன்னலமற்று சிறப்பான முறையில் பணியாற்றுவதுடன், இயற்கை பேரிடர்களிடமிருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்திடலாம் என இப்பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி கூட்டத்தில், மின்சாதன பயன்பாடு, இயற்கை பேரிடர் முதலுதவி மருத்துவ சேவை பயன்பாடு, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது, பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் க.தென்னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.அபிதாஹனீப், அலுவலக மேலாளர் (ஊரக வளர்ச்சி) கருப்பசாமி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.