எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நேற்று மாலையில் இறுதிச் சடங்கு நடைபெற்று ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ.வின் உடல் கீரைத்துறை மூலக்கரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல் நிலை பாதிப்பு...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ். இவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ளது. இவர் சர்க்கரை நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போஸூக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 69. இதைத்தொடர்ந்து அவரது உடல் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மலர்வளையம்...
ஏ.கே.போஸூசின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விரைந்து வந்தனர். ஏ.கே.போஸூசின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஏ.கே.போஸூசின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும் ஏ.கே. போஸ் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏ.கே. போஸ் மறைவு செய்தி கேட்டு கட்சியினர் சோகமடைந்தனர். அவர்களும் அவரது இல்லத்திற்கு விரைந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி
இந்த நிலையில் ஏ.கே.போஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஏ.கே.போஸின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோரும் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி சடங்கு...
பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் நேற்று மாலை இறுதி சடங்கு நடைபெற்றது. ஏ.கே.போஸின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஏ.கே. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்கலங்கியபடி நா தழுதழுக்க பேசினார். ஏ.கே. போஸின் தொண்டுகளை பற்றி அவர் விவரித்தார். ஏ.கே.போஸ் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார்.
நிர்வாகிகள் அஞ்சலி...
முன்னதாக அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், பாலகிருஷ்ணாரெட்டி, வளர்மதி, ராஜலெட்சுமி, நிலோபர் கபில், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.முத்துராமலிங்கம், கே.தமிழரசன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மா.இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மலர் வளையம், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மரணமடைந்த ஏ.கே.போஸூசிற்கு மனைவி பாக்கியலெட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமணியன், சங்கர், மகள்கள் டாக்டர் ஜெயலட்சுமி தேவி, ஜெயகார்த்திகா ஆகியோர் உள்ளனர்.
வாழ்க்கை வரலாறு
ஏ.கே.போஸ் 1972 – ம் ஆண்டு முதல் கட்சி பணி ஆற்றி வந்தார். எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராகவும், இணைச்செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த 2003 முதல் 2006 வரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க . வேட்பாளராக மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011–ம் ஆண்டு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2016–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 - வது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப