எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில், பாஜகவின் தேசிய நிர்வாகிகளும், மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது:கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் வரலாற்றில் அது மிகப்பெரிய சாதனையாகும். அந்த தேர்தலைக் காட்டிலும், அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அந்த வெற்றியை உறுதிசெய்வதற்காக, பாஜக தொண்டர்கள் அனைவரும் பாட வேண்டும்.அதுமட்டுமன்றி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்தக் கூட்டத்தில், பாஜகவின் உள்கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கட்சியின் விதிமுறைப்படி, ஒருவர் தொடர்ச்சியாக 2 முறை தலைவர் பதவியை வகிக்கலாம்.கட்சியின் தலைவரான அமித் ஷாவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலும், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடைபெற இருப்பதால், உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய காலமே உள்ளது. எனவே, அமித் ஷா தலைமையிலேயே பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் வியூகம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவு, தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை காரணமாக, மத்திய பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்மையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்க்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அந்தச் சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சில சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களையும், பிற ஜாதி மக்களையும் சமதானப்படுத்தி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தலித் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறவே, தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசிய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தேசிய பொதுக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.