எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில்,விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும். நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சபாநாயகர் தலைமை...கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா துவங்கி நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பெருமக்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், விஜயகுமார் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு:-
2 படகுகள், ரோப்கார்....கன்னியாகுமரிக்கு மட்டும் வருடந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் 75 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களில் சுமார் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே தற்போது விவேகானந்தர் பாறையிலுள்ள நினைவு மண்டபத்திற்கு படகின் மூலம் செல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவில் புதியதாக 2 படகுகள் வாங்கப்பட உள்ளன. மேலும், ஒரே சமயத்தில் 3 படகுகள் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு ஏதுவாக கூடுதலாக 2 படகு அடையும் தளங்கள் 20 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.
ஒரு கடல் வழி பாலம்... கூடுதலாக, கன்னியாகுமரியிலிருந்து விவேகானந்தர் பாறை செல்ல ரோப் கார் வசதியும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல ஒரு கடல் வழி பாலம் ஆகியவை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன்மூலம், சுற்றுலா பயணிகளுடைய எண்ணம் நிறைவேறும். இந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், குறிப்பாக கன்னியாகுமரியில் இருக்கின்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சியாக மாற்றம்...விளவங்கோடு வட்டத்தினை பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கிள்ளியூர் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கல்குளம் வட்டத்தினை பிரித்து, செருப்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவட்டார் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகவும் மற்றும் செண்பகராமன் புதூர் துணை மின் நிலையத்தின் மின்பளுவை குறைக்கும் வகையிலும் ஒரு புதிய 230 / 110 கி.வோ. வளிமகாப்பு துணை மின் நிலையம் 368 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் தக்கலையில் அமைக்கப்படும். எல்லைகள் மறுசீரமைப்பு குழுவின் பணி நிறைவடைந்தவுடன் நாகர்கோயில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும்.
பழையாற்றின் குறுக்கே...அழகியபாண்டிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும். அகஸ்தீஸ்வரம் வட்டம், தாமரைக்குளம் கிராமத்தில், பழையாற்றின் குறுக்கே 5 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை ஒன்று கட்டப்படும். அகஸ்தீஸ்வரம் வட்டம், கோவளம் கிராமத்தில் 12 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அழிக்கல் கிராமத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பெரியநாயகி தெருவில் 7 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலும் தூண்டில் வளைவுகள் 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். விளவங்கோடு வட்டம், மேல்மிடாலம் கிராமத்தில் 10 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தூண்டில் வளைவு 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும்.
ஒரு தூண்டில் வளைவு... கிள்ளியூர் ஒன்றியம், இணையம்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட இணையம் கிராமத்தின் கிழக்கே, தேவாலயம் இருக்கும் பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தூண்டில் வளைவு 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். விளவங்கோடு வட்டம், மார்த்தாண்டம் துறை கிராமத்தில் சர்ச்சுக்கு முன்னால் இடதுபக்கம் மற்றும் வலதுபக்கம் உள்ள வீடுகளை பாதுகாக்கும் பொருட்டு, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலரிப்பு தடுப்பு சுவர் 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும்.
உயர்மட்ட பாலங்கள்...தோவாளை, தாடிக்காரன்கோணம், கீரிப்பாறை லேபர் காலனி சாலையில் 0/2 கி.மீட்டரில் கீரிப்பாறை ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். திருவட்டார், பேச்சிப்பாறை, குட்டியூர் தச்சமலை சாலையில், 0/2 கி.மீட்டரில் கிழவியூர் ஆற்றின் அருகில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். தோவாளை, திடல் ஊராட்சிப் பகுதியில், காடுகரை-இறைவிபுதூர் சாலையில் 0/2 கி.மீட்டரில் கஞ்சியாற்றின் குறுக்கே, தற்போதுள்ள பழுதடைந்த குறுகிய பாலத்திற்குப் பதிலாக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும். குருந்தன்கோடு, தல்லாக்குளம், இரணியல்-முட்டம் சாலை முதல் தல்லாக்குளம் சாலையில், 0/2 கி.மீட்டரில் வள்ளியூர் ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் 2019-2020-ம் ஆண்டில் கட்டப்படும்.
சிறுபாலங்கள், மேம்பாலங்கள்....பெருஞ்சால்விளை சாலையில் கிமீ.1/6-ல் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். வட்டக்கோட்டை -அம்சி சாலையில் கிமீ. 6/6-ல் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் கட்டப்படும். குஞ்சிருப்புவிளை - மாதாபுரம் சாலையில் கிமீ.0/6-ல் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். தேசிய நெடுஞ்சாலை எண். 47-ல் கோட்டார் - செட்டிகுளம் பகுதியில் சுமார் 340 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். இதற்கு நில எடுப்பு பணிக்காக அம்மாவுடைய அரசு 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண். 47-B வடசேரி - ஒழுகினசேரி பகுதிகளில் ஒர் உயர் மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 89 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை கிடைத்தப் பின் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கீழ் 2018-19 திட்டத்தில் 8 சிறுபாலங்கள் 159 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மார்த்தாண்டம் - கருங்கல் சாலை கி.மீ. 1/8-ல் ரயில்வே கி.மீ. 259/500- 600 -ல் குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையங்களுக்கிடையே கடவு எண்.15-க்கு மாற்றாக சாலை மேம்பாலம் கட்டப்படும்.
புதிய டயாலிசிஸ் கருவிகள்...கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதை அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே, மாணவர்கள் சேர்க்கை 150 இடங்களாக உயர்த்தப்படும். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 8 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கேத் லேப் கருவி மற்றும் 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 5 புதிய அதிநவீன டயாலிசிஸ் கருவிகளும் நிறுவப்படும்.
ஆரோக்கிய மையம்...கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் 20 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும். விளவங்கோடு அரசு மருத்துவமனைக்கு எண்ணியல் ஊடுகதிர் கருவி, மீயொலி பரிசோதனைக் கருவி போன்ற மருத்துவக் கருவிகள் வழங்கி மேம்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஸ்டாலின் மீது தாக்கு....இதற்கிடையே விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார். இந்த அரசு மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்று பேசிய முதல்வர் எடப்பாடி, பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என்றும் காட்டமாக தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் பட்டியலிட்ட அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சை முடித்தார். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நாகர்கோவில் நகரமே கலை கட்டி காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப