எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,- கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என தினகரன் நினைக்கிறார். பணம் இருப்பவர்கள் எல்லாம் பதவியில் அமர முடியாது மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என தினகரனுக்கு சாட்டையடி கொடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டு;க்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்தநாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட கழக செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் வாரியத் தலைவருமான பி.பாலசுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் உதயம் ஏ.ராமசாமி. தொப்பம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் கிட்டுச்சாமி முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளரும் கலை இலக்கிய பிரிவு தலைவருமான லியாகத் அலிகான், மாவட்ட கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி பரமசிவம், தலைமைக் கழக பேச்சாளர்கள் எம்.கோபி காளிதாஸ், நடிகர்
ஏ.கே.ராஜேந்திரன். என். முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினர்.
கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நம்மை ஆளாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் நடைபெற்றது. வருகிற 30ம் தேதி கடைசியாக சென்னையில் விழா எடுக்கிறார்கள். புரட்சி தலைவரின் புகழை முதல்வரும், துணை முதல்வரும் பரப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தானும் கூட்டம் நடத்துகிறேன் என தினகரன் மேலூரில் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு ஏதாவது கூட்டம் நடத்துவார் என்று பார்த்தால் மன்னார்குடியில் கூட்டம் நடத்தினார். அதில் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். அதுபோல் 50 ஆயிரம் அடி தாண்டுவேன், 60 ஆயிரம் அடி தாண்டுவேன் என தன்னைத் தானே உயர்த்தி பேசி உள்ளார். 2001ல் நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆகி இருப்பேன் எனவும் கூறி உள்ளார். எனது வீட்டில் டிரைவர் உள்ளார். வேலை ஆட்கள் உள்ளனர். பல நண்பர்கள் உள்ளனர். அத்தனை பேரும் எனது சொத்துக்கோ அல்லது எனது உடமைக்கோ உரிமை கோரினால் எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலமாக அங்கே பாதுகாப்புக்காக அல்லது வேறு உதவிகளுக்காக சென்ற அந்த குடும்பத்தை சேர்ந்த தினகரன் இன்று எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது முதல் அமைச்சர் பதவியை நாங்கள் ஏற்றிருப்போம். நாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளோம். என்று பேசி உள்ளார். இது கேப்பையிலே நெய் வடிகிறது என்றால் அதை கேட்பவர்களுக்கு எங்கே போனது எங்கே போனது புத்தி?
மாநிலம் முழுவதும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து ஆட்களை திரட்டி தினகரன் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். ஆனால் இன்று கழகம் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமே தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள வணிக பெருமக்கள், தாய்மார்கள் இன்று நடைபெறுகின்ற கூட்டம் எழுச்சி போல அவர்கள் கூட்டத்தில் இருந்ததா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜெயிலுக்கு போனேன் ஜெயிலுக்கு போனேன் என்று நடிகர் வடிவேலு போல கூறி வருகிறார். எதற்காக நீங்கள் ஜெயிலுக்கு போனீர்கள்? காபிபோசா சட்டத்தில் கைது செய்து சிறை சென்ற குற்றவாளி தானே தினகரன். ஆனால் அவர் மகாத்மா காந்தியின் உத்தம பேரன் போல் கழக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருகிறார். அன்றைய தினம் லண்டன் வழக்கில் கருணாநிதியிடம் பிச்சை எடுத்து அவரை மட்டும் விடுவித்து அம்மாவை பொய் வழக்கில் காட்டி கொடுத்த துரோகி தான் தினகரன். அவரை நம்பி சென்ற நமது நண்பர்கள் மீண்டும் நமது கழகத்தில் இணைய வேண்டும்.
அம்மாவை கொலை செய்தவர்கள் தான் இன்று ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். தினகரன். திவாகரன். பாஸ்கரன் என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என நினைக்கின்றனர். பணம் இருப்பவர்கள் தான் முதல் அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வர முடியும் என்றால் டி.வி.எஸ் ஐயங்கார். டாடா பிர்லா, அம்பானி ஆகியோர் தான் பதவியில் இருந்திருக்க வேண்டும். பணம் இருப்பவர்களால் மட்டுமே பதவிக்கு வந்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அவ்வாறு உழைத்ததால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறையும். அம்மா 6 முறையும் முதல்வராக பதவி வகித்தனர். 37 எம்.பிக்களையும் அம்மா பெற்று தந்தார்.
வரவிருக்கின்ற திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மறைந்த போஸ் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெறும். திருவாரூரிலும் கழகமே மகத்தான வெற்றி பெறும். இவ்வெற்றிக்கு பிறகு தினகரன் கட்சியில் உள்ள தம்பிமார்கள் நமது கழகத்தில் வந்து இணைய வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.
மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக ஊடகங்களில் கூறி வருகிறார். நமது அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் அவருக்கு தெளிவாக பதில் அளித்துள்ளனர். வழக்கு போடுங்கள். அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்று பெறுவோம். நாங்கள் குற்றவாளி என்றால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 2016ம் ஆண்டில் ஸ்டாலின் பேண்ட் சர்ட் போட்டு பிரச்சாரம் செய்தார். ஆனால் அம்மா தான் மகத்தான வெற்றியை பெற்றார். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட போது அவர் முன்னாள் முதல்வர்களுக்கு இடம் கிடையாது என கூறியதை ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.மெரீனாவில் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்கும் உள்ளது. எனவும் தெரிவித்தோம். ஒரே நாளில் அவர்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற வைத்தவர்கள் தான் நம்முடைய முதல்வரும். துணை முதல்வரும். அ.தி.மு.கழகத்தை அழிக்க பார்த்த கருணாநிதியாலேயே முடியவில்லை. அவரது மகன் ஸ்டாலினால் தானா முடியப் போகிறது.?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மிக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகின்றனர். காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மாவின் வழியில் கையாண்டு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளனர். கழகத்தையோ ஆட்சியையோ எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அம்மா வழியில் நடைபெறும் கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் குப்புசாமி, ஏ.டி.செல்லசாமி, கே.எஸ்.என்.வேணுகோபாலு, தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார். சுப்புரத்தினம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆத்தூர் பி.கே.டி நடராஜன், ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், நத்தம் ஷாஜகான். சாணார்பட்டி ராமராசு, பழனி முத்துசாமி, குஜிலியம்பாறை மலர்வண்ணன், வடமதுரை லட்சுமணன், நிலக்கோட்டை யாகப்பன், வத்தலக்குண்டு பாண்டியன். திண்டுக்கல் ஜெயசீலன், கொடைக்கானல் மேல்மலை முருகன், நகர செயலாளர்கள் கொடைக்கானல் ஸ்ரீதர். பழனி முருகானந்தம், சார்பு அணி நிர்வாகிகள் திவான்பாட்சா, பாரதிமுருகன், ஜெயபாலன், வி.டி.ராஜன், வளர்மதி, அன்வர்தீன், ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல். வத்தலக்குண்டு பீர் முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,