எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சிறந்த மருத்துவ சேவை மற்றும் தூய்மை பராமரிப்புக்காக தேர்வான 17 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட விருது மற்றும் கேடயங்களை நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடபாடி பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.
முதல்வரிடம் வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவ சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 13 அரசு மருத்துவ நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட தர சான்றிதழ்கள் மற்றும் 2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666 ரூபாய்க்கான காசோலைகளையும், அரசு மருத்துவமனைகளில் சிறந்த தூய்மை பராமரிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 4 அரசு மருத்துவ நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட காயகல்ப் விருதிற்கான கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட இணை இயக்குநர்கள் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) மற்றும் துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசு...
தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவ நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்துக்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு தலா 10,000 ரூபாய் வீதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 3,00,000 ரூபாய் வீதமும் பரிசுத் தொகையும், தர சான்றிதழும் மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.
3 ஆண்டுகளுக்கு...
இப்பரிசுத் தொகை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். தேசிய ஆய்வுக் குழுவால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 17 பிரிவுகளும், மாவட்ட துணை மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 பிரிவுகளும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 பிரிவுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.
17 மருத்துவமனைகள்...
2017–18ம் ஆண்டில், மத்திய அரசால் அனுப்பப்பட்ட மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஆய்வுக் குழு, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2018-ல் மூன்று நாட்கள் ஆய்வு செய்து, மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி, தருமபுரி மாவட்டம் – பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் – பத்மநாபபுரம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு, கடலூர் மாவட்டம் – கடலூர், நாமக்கல் மாவட்டம் – நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம் ஆகிய 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தருமபுரி மாவட்டம் – பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தருமபுரி மாவட்டம் – மொரப்பூர், ராமநாதபுரம் மாவட்டம் – சாயல்குடி, கடலூர் மாவட்டம் – வடலூர், விழுப்புரம் மாவட்டம் – முகையூர், சேலம் மாவட்டம் – மேச்சேரி ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுத்து, தேசிய தர சான்றிதழ்களுடன் 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 666 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தூய்மை பராமரிப்பு
மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த் தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை மாநில அளவில் ஆண்டுதோறும் மூன்று கட்டமாக ஆய்வு செய்து முதல் இரண்டு இடங்களை பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் காயகல்ப் விருதும், முறையே 50 லட்சம் ரூபாயும், 20 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று, வட்ட மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் பரிசாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
சுகாதாரத் துறையால்...
அதன் படி, மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த் தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் பரிசையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம்– மணப்பாறை, அரசு தலைமை மருத்துவமனை இரண்டாம் பரிசையும்; சிறந்து விளங்கிய வட்ட மருத்துவமனையில், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், சிறந்து விளங்கிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், விழுப்புரம் மாவட்டம் – முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் முதல் பரிசிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய சுகாதாரத் துறையால் காயகல்ப் விருதுகளும், பரிசுத் தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பி. உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கு. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நா. ருக்மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...