எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கோட் : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பிரித்வி ஷா அபாரம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. புதுமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி (72 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (17 ரன்) களத்தில் இருந்தனர்.
ரிஷாப் பான்ட் அதிரடி
இந்த நிலையில் 2-வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நமது வீரர்கள் நொறுக்கித் தள்ளினர். கேப்டன் கோலி சற்று நிதானம் காட்ட, ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடினார். கீமோ பால், ரோஸ்டன் சேசின் பந்து வீச்சில் சிக்சர்களை பறக்க விட்டார். மறுமுனையில் கோலி பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை நெருங்கிய ரிஷாப் பான்ட் 92 ரன்களில் (84 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) தேவேந்திர பிஷூவின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகிப்போனார். அடுத்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அணியின் ஸ்கோர் 534 ரன்களாக உயர்ந்தபோது, விராட் கோலி 139 ரன்களில் (230 பந்து, 10 பவுண்டரி) பந்தை தூக்கியடித்தபோது கேட்ச் ஆனார்.
ஜடேஜா சதம்...
இதைத் தொடர்ந்து வந்த அஸ்வின் (7 ரன்), குல்தீப் யாதவ் (12 ரன்), உமேஷ் யாதவ் (22 ரன்) உள்ளிட்டோர் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதற்கிடையே அரைசதத்தை கடந்த பிறகு அட்டகாசப்படுத்திய ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர்கள் தேவேந்திர பிஷூ, ரோஸ்டன் சேசின் ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதில் ஒரு சிக்சர் அணியின் ஸ்கோர் 600 ரன்களை கடக்க உதவியது. 78 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜடேஜா, கடைசி விக்கெட் ஜோடியான முகமது ஷமியின் துணையுடன் தனது முதலாவது சர்வதேச சதத்தை எட்டினார். இது அவரது சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
649 ரன்கள் குவிப்பு
ஜடேஜா செஞ்சுரி போட்டதும், இந்திய அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா 100 ரன்களுடனும் (132 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), முகமது ஷமி 2 ரன்னுடனும் (6 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுக்கு 644 ரன்கள் எடுத்ததே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.
மே.இ.தீவுகள் திணறல்
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போலவே திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), கீரன் பவெல் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும், கீமோ பால் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
3-வது நாள் ஆட்டம்
நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேஸ் 53 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் போல்டானார். பால் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெவிஸ், கேப்ரியல் ஆகியோரையும் அஸ்வின் சாய்க்க, அந்த அணி 48 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
குல்தீப் அபாரம்
பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டத்தை தொடர்ந்தது பிராத்வொயிட் 10 ரன்களில் அஸ்வின் சுழலில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாவெலும் (21 ரன்) ஷான் ஹோப்பும் ஆடினர். நேற்றைய இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்களில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் சாதனை
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னில் சுருண்டது. அஸ்வின் நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாலோ-ஆன் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சால் 196 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெடடுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் அதிக பட்ச ஸ்கோர்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் 7-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.