எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,தான் பிறந்த சொந்த மாவட்டத்தின் வளங்களையும், இந்திய தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியவர், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பற்றி ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ஆர். பாலு என்று தங்கமணி காட்டமாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சொந்த கட்சித் தொண்டர்களுக்கே ரத்தக் கண்ணீர் வரக்கூடிய வகையில் சுயநல அரசியல் செய்பவர் என்று 2012-ம் ஆண்டே தனது தலைவரால் சபிக்கப்பட்ட டி.ஆர்.பாலு கனிகளுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டறியும் வித்தையை கரைத்துக் குடித்தவர் போலிருக்கிறதே ! என்று நினைக்கத் தோன்றும் வகையில் ஆப்பிள், பேரிக்காய் என்றெல்லாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அரைவேக்காட்டு அறிக்கையை...ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்த டி.ஆர்,. பாலு, மக்களை “ஞான சூனியமாக்கும்” முயற்சியில் இறங்கி, தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி என்றும், சாலைப் பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்வது எல்லாம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி என்றும்” தனது அறிக்கையில் கூறியிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போனதால் ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விளக்க வேண்டிய சூழ்நிலை...குழப்பத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு, தெளிவு பெறுவதற்காக மாநில நெடுஞ்சாலைப் பணிகளைப் பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. தமிழ் நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்த, மூத்த அதிகாரிகளைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு, நிலைக்குழு ஆகிய இரண்டு கமிட்டிகள் உள்ளன. அவை, நிதித் துறை துணைச் செயலரும், திட்ட இயக்குநரும், உறுப்பினர்களாக உள்ள மதிப்பீட்டு குழு முதலில் தொழிற்நுட்பத்தை அம்சங்களை சரிபார்க்கிறது. அதன் பிறகு நிதி குறித்த அம்சங்கள் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் மதிப்பீட்டுக்குழுவில் இருந்து ஒப்பந்தங்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒப்பந்ததாரருக்கு டெண்டர்...நிதித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், திட்ட இயக்குநர், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் முதன்மைப் பொறியாளர் ஆகியோர் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் ஒப்பந்தத்தின் விவரங்களை ஆய்வு செய்து, அது சரியாக இருப்பின், உலக வங்கியின் பரிசீலனைக்கு அனுப்புகிறது. உலக வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்து, ஏற்புடையதாக இருந்தால், அந்த ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. இது, தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்திலும் நடைமுறையில் இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது.
முதல்வருக்கு தொடர்பு கிடையாது...தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் திட்டம், நடைமுறையில் இருந்தது. தற்பொழுது, அரசில், டெண்டர் முறையில் எந்தவித ஊழல் முறைகேட்டுக்கும் வழியில்லாத வகையில் டெண்டர் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையிலும், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இரண்டு குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கும், தற்போது துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. டெண்டர் தொடர்புடைய கோப்புகள், துறையின் அமைச்சருக்கு வராத போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எப்படி கூறமுடியும்?
தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று முதல்வர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்கிறாரே! என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் டி.ஆர் . பாலு. அது குறித்த கேள்வியை பாலுவுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முடிச்சு போடுவது ஏன்?முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்புத் துறையிடம் புகார் கொடுத்த பின், தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசி வழித்தடத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ. 2.20 கோடிதான் செலவாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்படியானால் 12 ஆண்டுகளுக்கு முன், 2006-ம் ஆண்டு,டி.ஆர். பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் - குமாரபாளையம் நான்கு வழிச் சாலை, ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு ரூ. 8.78 கோடி செலவாகியது எப்படி ? மற்றும் குமாரபாளையம் - செங்கப்பள்ளி சாலை அமைக்க 1 கி.மீ.க்கு ரூ.7.83 கோடி செலவாகியது எப்படி? என்று தான் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு டி.ஆர். பாலு நேரடியாக பதில் அளிக்காமல் ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் முடிச்சு போடுவது ஏன்? இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.