முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் லாட்டரியில் இந்தியர் சவுரவுக்கு ரூ.7 கோடி பரிசு

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : இது குறித்து கலீஜ் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

துபாய் டூட்டி பிரீ லாட்டரிக்கு நேற்று குலுக்கல் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 45வயதான சவுரவ் தேவ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.7.34 கோடி(10லட்சம் டாலர்) பரிசு கிடைத்துள்ளது. இந்தியரான சவுரவ் தேவ் கடந்த 6 ஆண்டுகளாகக் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் போது, சவுரவ் தேவ் லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு இப்போது பரிசு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சவுரவ் தேவ் கூறுகையில்,

துபாய் டூட்டி பிரீ லாட்டரி டிக்கெட் வாங்கிய எனக்கு முதல்பரிசு கிடைத்துள்ளதை நம்ப முடியவில்லை. இந்தப் பரிசு எனக்கு புதிய எதிர்காலத்தையும், என் குடும்பத்துக்கு மிகப்பெரிய எதிர்காலத்தையும் நீண்டகாலத்துக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார். சவுரவ் தவிர, பாபு அஜித் பாபு என்பவருக்கு 2-வது பரிசாக பி.எம்.டபிள்.யு. சொகுசு காரும், 3-வது பரிசாக இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனாவுக்கு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரும் பரிசாகக் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து