எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது.
புனேவில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்ததன. மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் தேவந்திர பிஷூ நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான பேபியன் ஆலன் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சந்தர்பால் ஹேம்ராஜ், கெய்ரன் பொவல் ஜோடி சீரான தொடக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ஹேம்ராஜ் கடைசி பந்தையும் விளாச முயன்ற போது தோனியின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். 20 பந்துகளை சந்தித்த சந்தர்பால் ஹேம்ராஜ் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அடுத்த சில ஓவர்களில் கெய்ரன் பொவலையும் (21), பும்ரா வெளியேற்றினார். 145 கி.மீ. வேகத்தில் வீசப்பட்ட பந்தை பொவல் தொட முயன்ற போது முதல் சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. வலதுபுறம் மின்னல் வேகத்தில் வந்த கேட்ச்சை ரோஹித் அற்புதமாக மடக்கினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்லோன் சாமுவேல்ஸ் 17 பந்துகளில், 9 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்த சிம்ரன் ஹெட்மையர் மட்டையை சுழற்றினார். யுவேந்திர சாஹல் வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை ஷாய் ஹோப், மிட்விக்கெட் திசையை நோக்கி சிக்ஸர் விளாசினார். இதையடுத்து சாஹல் வீசிய 17 மற்றும் 19-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார் ஹெட்மையர். குல்தீப் யாதவ் புல்டாசாக வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றி ஹெட்மையர் 3-வது பந்தில் தோனியின் மதிநுட்பத்தால் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
21 பந்துகளை சந்தித்த ஹெட் மையர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஹெட்மையர் 6.2 ஓவர்களில் 56 ரன்கள் விளாசியிருந்தார். இதையடுத்து களமிறங்கிய ரூவன் பொவல் (4), குல்தீப் யாதவ் பந்தை முட்டு போட்டு விளாச முயன்றார். ஆனால் நன்கு சுழன்று வந்த பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் இணைந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் நிதானமாக பேட் செய்தார். சீராக ரன்கள் சேர்த்த ஷாய் ஹோப் 72 பந்துகளில் தனது 7-வது அரை சதத்தை கடந்தார்.
இதன் பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை அவர், அதிகரித்தார். கலீல் அகமது வீசிய 35 மற்றும் 37-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசினார் ஷாய் ஹோப். குல்தீப் யாதவ் வீசிய 38-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
சுமார் 15 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் பிரித்தார். பேக் ஆப் லென்ந்த்தில் வீசப்பட்ட பந்தை ஜேசன் ஹோல்டர் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரராக நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 39 பந்துகளை சந்தித்த ஜேசன் ஹோல்டர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
6-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஜேசன் ஹோல்டர் 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஃபேபியன் ஆலன் களமிறங்கினார். 40 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 211 ரன்கள் எடுத்தது. வந்த வேகத்திலேயே அதிரடியாக விளையாட முயன்ற ஆலன் 5 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க அது, ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஆஷ்லே நர்ஷ் களமிறங்கினார்.
சிறப்பாக பேட் செய்து வந்த ஷாய் ஹோப் 113 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 43.5 ஓவர்களில் 227 ஆக இருந்தது.
கடைசி கட்டத்தில் ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச் அதிரடியாக விளையாடினார்கள். ஆஷ்லே நர்ஷ் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பும்ராவின் கடைசி ஓவரில் போல்டானார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இதில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. கேமார் ரோச் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 35 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, யுவேந்திர சாஹல் ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 284 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்களும் ஜேசன் ஹோல்டர், மெக்காய், ஆஷ்லே நர்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே