எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.- 21 - ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் மாஜி தி.மு.க. மந்திரி ஆ. ராசாவின் பினாமியான சாதிக்பாட்சாவின் சாவில் பல மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இறந்தது சாதிக்பாட்சா தானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி பின்னர் கைதாகி, தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அவரது காவல் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவரது வர்த்தக கூட்டாளிதான் சாதிக்பாட்சா. சாதிக்பாட்சாவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை அவரையும் விசாரணை என்ற வளையத்துக்குள் கொண்டு வந்தது. சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்திய பிறகு எனக்கு தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று மீடியாக்களிடம் தெரிவித்தார் சாதிக்பாட்சா. ஆனாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சி.பி.ஐயின் கையில் சிக்கியிருப்பதால் சாதிக்பாட்சா எந்த நேரத்திலும் அப்ரூவராக மாறுவார் என்ற பேச்சு அடிபட்ட போது பரபரப்பு கிளம்பியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அலைக்கற்றையை போலவே கண்ணுக்கு தெரியாமல் காற்றில் போய் விட்டது ராசாவின் நண்பரான சாதிக்பாட்சாவின் உயிர். கடந்த 16 ம் தேதி திடீரென மரணத்தை தழுவிக் கொண்டார் சாதிக் பாட்சா. அன்றைய தினம் டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்தாராம் சாதிக். ஆனால் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார் சாதிக்பாட்சா. இந்த சாவில்தான் பல மர்மங்கள் நீடிக்கின்றன.
கரூர் மாவட்டம் பள்ளபட்டிதான் சாதிக்கின் சொந்த ஊர். ஆரம்பத்தில் பாய் விற்கும் தொழில் செய்து வந்த இவருக்கு ஆ. ராசாவின் அறிமுகம் கிடைத்த பிறகு அசுர வளர்ச்சி ஏற்பட்டது. சென்னை, கோவை, பெங்களூர் என்று நாடு முழுவதும் பரந்து விரிந்தது சாதிக்கின் வர்த்தக சாம்ராஜ்யம். கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற சாதிக்பாட்சா நடத்திய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். நினைத்த நேரத்தில் காவல் துறையின் உயரதிகாரிகளையும், இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களையும் கூட சந்திக்கும் அளவுக்கு மிகுந்த செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தாராம் சாதிக்.
ஆனால் ராசாவின் கைதுக்குப் பிறகு நிலைமை அடியோடு மாறியது. சி.பி.ஐ. விசாரணை அடுத்தடுத்து நெருக்க என்ன செய்வது என்று தெரியாமல் சில வி.ஐ.பி. க்களை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார் சாதிக். ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு எப்படியோ ஒரு வி.ஐ.பியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த நினைத்தால் .... நீ நல்லா இருக்க முடியாது என்று எதிர்முனையில் இருந்து மிரட்டல் வந்ததாம். அதனால் கடுமையான மனக்குழப்பத்தில் இருந்திருக்கிறார் சாதிக். இந்த சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு மொரீசியஸ் உட்பட சில நாடுகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்ட விவகாரத்தை புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது.
அந்த நாட்டு அரசுகளுக்கு மேலும் பல விவரங்களை தரும்படி கடிதங்கள் அனுப்பப்பட்டன. அமலாக்கத்துறை மூலமும் கடிதம் போனது. இது தவிர, இந்தியாவில் சுமார் 800 கோடி அளவுக்கு சாதிக்பாட்சா பெயரில் இருந்த சில சொத்துக்களின் விவரங்களையும் தோண்டியெடுத்த மத்திய புலனாய்வுத் துறை அது பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுடன் விசாரணைக்காக நாள் குறித்து வைத்திருந்தது. அதன் காரணமாக இனி தப்பிக்கவே முடியாது என்பதை தெரிந்து கொண்ட சாதிக்பாட்சா, பேசாமல் அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை சொல்லி விடலாம் என்ற மன நிலைக்கு வந்ததாகவும் பலமான பேச்சு அடிபட்டது.
சாதிக் அப்ரூவர் ஆகலாம் என்ற செய்தி கசிந்ததுமே பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாம். இந்த மிரட்டலால் மேலும் அரண்டு போன சாதிக்பாட்சா எங்கும் வெளியில் செல்லாமல் கடந்த 2 வாரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாராம். தூக்கில் தொங்கிய 16 ம் தேதி காலை சுமார் 7.30 மணிக்கு அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரிடம் இருந்து போன் வந்ததாம். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களிடையே உரையாடல் நீடித்திருக்கிறது.
எதிர்முனையில் இருந்த அந்த குரலில் இருந்த கோபம் சாதிக்கை மிகவும் துவள வைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தில் சகஜமாக நடந்து வந்திருக்கிறார் சாதிக். ஒரு கட்டத்தில் தனது மனைவியிடம் நான் சிறைக்குப் போய் விட்டால் குழந்தைகளை நல்ல படியாக பார்த்துக் கொள் என்று கண்கலங்கி சொன்னாராம் சாதிக்பாட்சா. அவரது மனைவி தன் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக வெளியில் சென்றார்.
பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிய போது மாடியில் உள்ள படுக்கை அறையில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் கயிற்றை போட்டு பிணமாக தொங்கினாராம் சாதிக்பாட்சா. அடுத்த சில விநாடிகளில் சாதிக்கின் மர்ம சாவு பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவவே இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில் மீடியாக்களில் அனல் பறந்தது. பிற்பகல் 3 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சாதிக் உடல் கொண்டு வரப்பட்ட போது அவரது முகம் கூட தெரியாத படி மொத்த உடலையும் போலீசார் வெள்ளைத் துணியால் மூடி மறைத்திருந்தனர். சாதிக்கின் மனைவி ரஹெனா பானு உட்பட உறவினர்கள் யாருமே அங்கு வரவில்லை. போலீஸ் தரப்பில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அன்று முழுவதுமே சாதிக்கின் குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேரும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் அன்று மாலையில் திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த சாதிக்பாட்சாவின் மனைவி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன உளச்சலையில் இருந்த தன் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சிலரது வழிகாட்டுதலின் பேரில் அவசர அவசரமாக ஒரு வாக்குமூலம் கொடுத்தாராம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் சாதிக் என்பதால் இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. இதனால் மறுநாள் காலையில் நடந்த பிரேத பரிசோதனை சி.பி.ஐ. அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடந்ததாம். அனைத்தும் வீடியோவாகவும் எடுக்கப்பட்டதாம்.
சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் நிருபர்கள் ஒரு கேள்வி கேட்ட போது, இறந்தது சாதிக்பாட்சா தானா என்பது எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு டெட்பாடி. அவ்வளவுதான் என்று அவர் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் இறந்தது சாதிக்தானா என்ற சந்தேகமும் தற்போது பரவலாக எழுந்துள்ளது. சாதிக்பாட்சாவின் நீண்ட கால நண்பரிடம் இது பற்றி கேட்ட போது, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் சாதிக் எழுதிய 4 கடிதங்கள் போலீஸ் வசம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த கடிதங்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன என்பதுதான் புதிராக உள்ளது. ஒன்று மட்டும் உறுதி. பல்வேறு இடங்களில் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்திருக்கிறது. நம்பியோர்கள் எல்லாம் தன்னை நட்டாற்றில் விட்டு விட்டதாக அவர் புலம்பியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ அலைக்கற்றை ஊழலில் சிக்கிய சாதிக்கின் உயிர் அலைக்கற்றை போலவே மாயமாகிப் போனதுதான் வேதனைக்குரிய விஷயம்.
இதனிடையே சாதிக்கின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இது குறித்து பேட்டியளித்த சுப்பிரமணிய சுவாமி கூறுகையில், நான் ஏற்கனவே சொன்னேன். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய பலருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். சாதிக்கின் இந்த மரணம் குறித்து கோர்ட்டின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்று கூறினார். சுப்பிரமணிய சுவாமி கூறுவதிலும் உண்மை இருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.