முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஆதார் அட்டை இருந்தால் 2 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசிக்க புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் சுவாமியை 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம்.

ஆதார் அட்டை இருந்தால் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் வழக்கம்போல் வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்கலாம்.

திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 50 முதல் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதில் 50 சதவீதத்தினர் சர்வ தரிசனம் மூலமாக சுவாமியை தரிசிக்கின்றனர். ஆனால் இவர்கள், வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சோதனை முயற்சியாக ‘ஸ்லாட் சர்வ தர்சனம்’ (எஸ்எஸ்டி) என்ற புதிய முறையை கடந்த 18-ம் தேதி அறிமுகப்படுத்தியது. வரும் 23-ம் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த முறை அமலில் இருக்கும். ஆதார் அட்டை உள்ள சாமானிய பக்தர்கள் அனைவரும் இந்த முறையில் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
‘ஸ்லாட் சர்வ தரிசனம்’ முறையை அமல்படுத்த திருமலையில் 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 117 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் ஆதார் அட்டை வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டும் ‘ஸ்லாட் தரிசனம்’ முறைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் சென்று வெறும் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். 


 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து