எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தை தானாக முன்வந்து வழங்கியுள்ளனர் என்றும், தேவையான அளவிற்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி: தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?
பதில்: ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை நான்கு மாநிலமும் வழங்க வேண்டுமென்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக, கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.
கேள்வி: தொடர்ந்து நமக்குக் கிடைக்கக் கூடிய தண்ணீர் இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?
பதில்: ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.
கேள்வி: பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை மாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?
பதில்: சுமார் 56 கிலோ மீட்டருக்கு தருமபுரியில் எல்லைக் கல் நடப்பட்டு விட்டது. சேலத்தைப் பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டு விட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்பட வேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங்களை பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு தானாக முன்வந்து வழங்கியிருக்கின்றார்கள். இந்த பசுமை வழிச் சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை பெங்களூரிலிருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதே போல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது. 2009-லிருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை ஒரு கோடியே 7 இலட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம். எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.
கேள்வி: இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்...?
பதில்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கேள்வி: அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே வெளியில் விடப்படும் சூழ்நிலை மாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளதே?
பதில்: இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் நடந்து கொள்கின்ற பொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லை பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்ற பொழுது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.
கேள்வி: குறிப்பாக, கவர்னர் வருவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று எல்லோரும் சொல்கிறார்களே?
பதில்: இது ஒரு ஆக்கப்பூர்வமான திட்டம், இதை யாரும் வரக்கூடாது என்று ஜனநாயக நாட்டில் சொல்ல முடியாது, வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு வருகை புரிவது தவறல்ல.
கேள்வி: விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....
பதில்: ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை, ஏற்கனவே, முந்தைய காலத்திலேயிருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமென்று சொன்னால், அந்தப் பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
கேள்வி: இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்கவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே?
பதில்: இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.
கேள்வி: நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?
பதில்: இதுவரை இல்லாத வகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத் தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள். அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும். அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக்கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக் கொடுக்கின்றது.
கேள்வி: இரும்பாலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார்களே?
பதில்: இது மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய ஸ்டீல் பிளாண்ட் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாதென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பாரதப் பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை அமைச்சர்களுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாதென்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.
கேள்வி: தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?
பதில்: ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் பேசுவார்கள்.
கேள்வி: குறிப்பாக 18 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறதே?
பதில்: தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.
கேள்வி: எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?
பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.
கேள்வி: நீதிமன்ற தீர்ப்பு வந்த பொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதி அவர்களே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024