முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இலங்கை வீரர் சங்ககரா புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என இலங்கை ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்துள்ளார். தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து