முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

திங்கட்கிழமை, 13 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள கடல் பகுதியில், திடீர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை இல்லாத பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 4 செ.மீ., மழையும், பெருஞ்சாணி மற்றும் நாமக்கல்லில் 3 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.” என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து