முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்: விக்கிரவாண்டியில் இன்று முதல்வர் எடப்பாடி பேசுகிறார்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டியில் இன்று  8-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றிக்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரது வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித்தேர்தலிலும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அனைவரும் வியக்கத்தக்க வெற்றி பெறும் என்பதை முன்னறிவிக்கும் வகையிலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பிரம்மாண்ட வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 5-ம் தேதி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்குநேரியிலும், 8-ம் தேதி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நாங்குநேரியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற உறுதியை மக்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். முன்னதாக நடந்த இடைத்தேர்தலில் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் அமோக வெற்றி பெற்றது தெரிந்ததே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து