முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

பாராளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 6-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 

இந்த நிலையில் இரண்டாம் கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.  இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து