முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2018 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு,  தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்தது.  இந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி,  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஸ்டேட் பேங்கிற்கு உத்தரவிடப்பட்டு,  அந்த தரவுகள் தேர்தல் ஆணைய இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன.  இந்த தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தேர்தல் பத்திர திட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்,  பெரும் அரசியல் கட்சிகள் பலன் அடைந்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மையம் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து